திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1215 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1215பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செழும் கோதை-லிலோ உபகரணங்களை விட்டு-அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்- தன்னைக் காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ) 8
முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப் பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-8
பதவுரை Show / Hide
முற்றிலும், Muttirulum - (வினையாட்டுக் கருவியான சிறுமுறத்தையும் (- (இருவரும்) (வயல் ஆலி புகுவர்கொலோ-.))
பைங்கிளியும், Paingiliyum - பச்சைக் கிளியையும்
பந்தும், Pandhum - பந்தையும்
ஊசலும், Oosalum - ஊஞ்சலையும்
சிற்றில்பேசுகின்ற, Sitrilpesugirn - சிறிய கூட்டிலிருந்து பேசுகிற
மென் பூவையும், Men Poovaiyum - மெல்லிய நாகணவாய்ப ; பறவையையும்
விட்டு அகன்ற, Vittu Aghandra - விட்டிட்டு வெளியேறின
செழு கோதை தன்னை, Sezhu Kothai Thannai - அழகிய பூமாலை போன்றவளும்
முற்று இழையை, Muttru Izhaiyai - நிறைந்த ஆபரணங்களையிணந்த வளுமான என் மகளே
பெற்றிலேன், Petrilein - நான் கண்ணால் காணப்பெற்றிலேன்;
மற்று எல்லாம் கைதொழ, Mattru Ellam Kaithozha - எல்லோருங் கண்டு ஸேவிக்கும் படியாக
பிறப்பு இலிபின்னே நடந்து போய், Pirappu Ilipinnai Nadandhu Poi - நித்யனான எம்பெருமான் பின்னே  நடந்துசென்று.