திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1217 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா – ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்) 10 | தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று
காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே –3-7-10 | பதவுரை Show / Hideதாய், Thaai - தாயானவள் நின்று மனம் இரங்க, Ninru Manam Irangka - வயிறொயி நிற்க தனியே, Thaniye - தாயினிடம் சொல்லாமல் தன் இஷ்டப்படியே நெடு மால் துணை ஆ, Nedu Maal Thunai Aa - ஸர்வேச்வரனைத் துணையாகக் கொண்டு போயின, Poyin - புறப்பட்டுப் போன பூ கொடியாள், Poo Kodiyal - அழகிய கொடிபோன்ற என் மகளும் (அவனும் ஆகிய இருவரும்) புனல் ஆலி, Punal Aali - நீர்வளம் மிக்க திருவாலியிலே புருவர் என்று, Puruvaar Endru - சென்று சேர்ந்திருப்பர்களோ என்று சிந்தைப்படுவதாக காய் சினம் வேல் கலியன், Kaai Sinam Vel Kalyan - எதிரிகளைத் தபிக்கச் செய்கின்ற கோபத்தையும் வேலையுமுடையரான திருமங்கையாழ்வார் ஒலிசெய், Olisei - அருளிச்செய்த தமிழ் மாலை பத்தும், Tamil Maalai Pathum - இத்தமிழ்ப் பாமாலை பத்தையும் மேவிய நெஞ்சு உடையார், Meviya Nenju Udaiyaar - (கற்க) விரும்பும் மனமுடைய வர்கட்கு விண் உலகு, Vin Ulagu - பரமபதம் தஞ்சம் ஆவது, Thanjam Aavathu - ப்ராப்யபூமியாம். |