திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1217 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1217பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா – ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்) 10
தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும் மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே –3-7-10
பதவுரை Show / Hide
தாய், Thaai - தாயானவள்
நின்று மனம் இரங்க, Ninru Manam Irangka - வயிறொயி நிற்க
தனியே, Thaniye - தாயினிடம் சொல்லாமல் தன் இஷ்டப்படியே
நெடு மால் துணை ஆ, Nedu Maal Thunai Aa - ஸர்வேச்வரனைத் துணையாகக் கொண்டு
போயின, Poyin - புறப்பட்டுப் போன
பூ கொடியாள், Poo Kodiyal - அழகிய கொடிபோன்ற என் மகளும் (அவனும் ஆகிய இருவரும்)
புனல் ஆலி, Punal Aali - நீர்வளம் மிக்க திருவாலியிலே
புருவர் என்று, Puruvaar Endru - சென்று சேர்ந்திருப்பர்களோ என்று சிந்தைப்படுவதாக
காய் சினம் வேல் கலியன், Kaai Sinam Vel Kalyan - எதிரிகளைத் தபிக்கச் செய்கின்ற கோபத்தையும் வேலையுமுடையரான திருமங்கையாழ்வார்
ஒலிசெய், Olisei - அருளிச்செய்த
தமிழ் மாலை பத்தும், Tamil Maalai Pathum - இத்தமிழ்ப் பாமாலை பத்தையும்
மேவிய நெஞ்சு உடையார், Meviya Nenju Udaiyaar - (கற்க) விரும்பும் மனமுடைய வர்கட்கு
விண் உலகு, Vin Ulagu - பரமபதம்
தஞ்சம் ஆவது, Thanjam Aavathu - ப்ராப்யபூமியாம்.