திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1218 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1218பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகள் எங்கள் அபிமதங்கள் செய்ய வேணும் – என்று பிரார்திக்கிற ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நெஞ்சே நீயும் சென்று அனுபவி -என்கிறார்) 1
நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல் எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும் கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே ! –3-8-1
பதவுரை Show / Hide
நந்தாவிளக்கே, Nandavilakke - ‘நித்யமாய் ஸ்வயம் ப்ரகாசமான ஞானத்தை ஸ்வரூபமாகவுடையவனே! (- (என் மனனே வணங்கு-.))
அளத்தற்கு அரியாய், Alaththarku Ariyai - அளவிட முடியாதவனே!
நரநாரணனே, Naranarayananey - நரநாரயணாவதாரம் செய்தருளினவனே!
கரு மா முகில் போல் எந்தாய், Karumaa Mukil Pol Endhaai - கறுத்துப் பெருத்த மேகம் போன்ற எம்பெருமானே
எமக்கே அருளாய் என, Emakke Arulai Ena - எங்களுக்கே அருள் செய்ய வேணும் என்று சொல்லி
இமையோர்நின்று பரவும் இடம், Imaiyorninru Paravum Idam - தேவர்கள் இந்நிலத்தில் வந்து நின்று துதிசெய்யுமிடமானதும்,
அம் தேன், Am Then - அழகிய தேன்சாதி வண்டுகள்
எத்திசையும், Eththisaiyum - எல்லாவிடங்களிலும்
கந்தாரம் இசை பாட, Kanthaaram Isai Paada - தேவகாந்தாரி ராகம் பாடவும்
களி வண்டு, Kali Vandu - களி வண்டு சாதியிற் பிறந்த வண்டுகள்
மாடே, Maade - பக்கங்களில்
மிழற்ற, Mizhatra - ஆலாபனை பண்ணவும்
மந்தாரம், Mandhaaram - பாரிஜாத மரங்கள்
நிழல் துதைந்து நின்று, Nizhal Thuthaindhu Ninru - நிழல் தர நெருங்கி நின்று
மணம் மல்கும், Manam Malkum - பரிமளம் நிறைந்திருக்கப்பெற்றதுமான
நாங்கூர்;, Naangoor - திருநாங்கூரிலுள்ள
மணிமாடக் கோயில், Manimaadak Koyil - மணிமாடக் கோயிலென்னுந்திருப்பதியை