திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1219 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1219பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தைப் போக்கினவன் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்ற அருளினான் நெஞ்சே -உன் துக்கம் எல்லாம் கெட அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 2
முதலைத் தனிமா முரண் தீர அன்று முது நீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மானிடம் விண்ணனவும் பதலைக்க போதததொளி மாட நெற்றிப் பவளக் கொழுங்கால பைங்கால் புறவம் மதலைத் தலை மென்பெடை கூடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-2
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகாலத்தில் (- (மணிமாடக்கோயில் என் மனனே, வணங்கு,))
முதுநீர்தடத்து, Muthuneerthadathu - அகாதமான நீரை யுடைய பொய்கைக் கரையிலே
முதலை தனி  மா முரண் தீர, Muthalai Thani Maa Murandhira - முதலையினுடைய மிகப் பெரிய துஷ்டத்தனம் தீரும்படியாகவும்
செம் கண் வேழம் உய்ய, Sem Kan Vezham Uyya - சிவந்த கண்களையுடைய கஜேந்திராழ்வான் உஜ்ஜீவிக்கும் படியாகவும்
விதலைத்தலை சென்று, Vithalaithalai Sendru - (அவ்யானை) மிகவும் நடுங்கிக் கிடந்த ஸமயத்தில் எழுந்தருளி
அதற்கே உதவி, Adharkae Uthavi - அந்த யானைக்கு உபகரித்து
வினை தீர்த்த அம்மான் இடம், Vinai Theertha Ammaaan Idam - அதன் இடரை நீக்கின பெருமான் எழுந்தருளியிருக்குமிடமானதும்,
விண் அணவும், Vin Anavum - விண்ணுலகை அளாவியிருப்பனவாய்
புதலை கபோதம், Puthalai Kapodham - கலசங்களையும் கபோத வொழுங்குகளையுமுடையனவாய்
ஒளி மாடம் நெற்றி, Oli Maadam Netri - (இழைத்த ரத்னங்களினால்) ஒளி பெற்றனவான மாடமாளிகைகளினுடைய முகங்களிலே,
பவளம் கொழுகால பைங்கால் புறவம், Pavalam Kozhukala Paingaal Puravam - அழகிய பவழத்தூண்போன்ற பசுமையான காலையுடைய புறா
மதலைத்தலை மென் பெடை கூடும் நாங்கூர், Madhalaithalai Men Pedaikoodum Naangoor - கொடுங்கையின் மேலுள்ள மெல்லிய பேடையுடனே கலவி செய்யப்பெற்ற திரு நாங்கூரிலே