திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1220 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1220பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையைப் போக்கி – அத்தாலே ப்ரீதியான ஸ்ரீ பிராட்டி கரத்தைப் போலே அணைக்க அவளோட்டை வரும் சம்ச்லேஷத்தை பெற்ற ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே –அப்போது சென்று அனுபவி என்கிறார்) 3
கொலைப் புண் தலைக் குன்ற மொன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர் செய்து கொங்கு ஆர் இலைப் புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மானிடம் ஆளரியால் அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி மலைப்பண்ட மண்டத்திரை யுந்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே ! –3-8-3
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகாலத்தில், (- (இந்த ஸந்தோஷத்தினால்) (நாங்கூர்; * * *  வணங்கு))
கொலை புண்தலை ஒன்று குன்றம் உய்ய, Kolai Pundhalai Ondru Kuntram Uyy - கொலைத்தொழில் செய்ய வல்லதும் புண்பட்ட தலையையுடையதும் மலைபோன்றதுமான ஒரு யானை உஜ்ஜீவிக்கும்படியாக
கொடுமா முதலைக்கு இடர் செய்து, Kodumaa Muthalaikku Idar Seidhu - கொடுமையிற் சிறந்த முதலைக்கு துன்பமுண்டாக்கி
கொங்கு ஆர் இலை புண்டரிகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட, Kongu Aar Ilai Pundarigathaval Inbam Anbodu Anaindhitta - பரிமளம் நிரம்பிய இலைகளையுடைய தாமரைப்பூவிற் பிறந்தவளான பிராட்டியின் சேர்த்தி யின்பத்தை அன்புடன் அநுபவிக்கப்பெற்ற
பொன்னி, Ponni - காவேரியானது,
ஆள் அரியால், Aal Ariyaal - வீரச் சிங்கங்களாலே
அலைப்புண்ட, Alaippund - ஸம்ஹரிக்கப்பட்ட
யானை, Yaanai - யானைகளினுடைய
மருப்பும், Maruppum - தந்தங்களையும்
அகிலும், Akilum - அகில் மரங்களையும்
அணிமுத்தும், Animuthum - அழகிய முத்துக்களையும்
வெண் சாமரையோடு, Ven Saamaraiyodu - வெளுத்த சாமரங்களையும்
மலை பண்டம் அண்ட, Malai Pandam Andha - மலையில் விளையக்கூடிய மற்றும் பல வஸ்துக்களையுமெல்லாம்
திரை, Thirai - அலைகளாலே
உந்து, Undhu - தள்ளிக்கொண்டு பெருகப்பெற்ற