திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1223 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூதனையை அப்போதே பிராணன் போம்படி முலை உண்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திருமணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 6 | பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க்கழுதுக்கு இரங்காது அவள் தன்
உண்ணா முலை மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து
மண் எனது இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-6 | பதவுரை Show / Hideபண்ணேர் மொழி ஆய்ச்சரியர் அஞ்ச, Panneer Mozhi Aaychariyar Anja - (பண்ணிசையோடொத்த பேச்சையுடையரான இடைச்சிகள் பயப்படும்படியான வடிவுடையவளாய் (- (மணிமாடக்கோயில் என் மன்னே! வணங்கு–;)) வஞ்சம் பகுவாய் கழுதுக்கு இரங்காது, Vanjam Pakuvai Kazhuthukku Irangathu - வஞ்சனையையும் பெரிய வாயையு முடையளான (பூதனையென்னும்) பேய்ச்சியினிடத்தில் தான் நோவுபடாமல் அவள் தன் உண்ணா முலைமற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம், Aval Than Unnaa Mulaimattraval Aaviyodum Udaney Suvaithan Idam - ஆப்பூதனையினது உண்ணத் தகாத முலைப்பாலை அவளுடைய உயிரோடு கூடவே உறிஞ்சியுண்ட பெருமானுடைய இருப்பிடமாய் ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று, Ongu Pain Thaal Kan Ar Karumpin Kazhai Thinru - உயர்ந்து பசுங்கால்களை யுடையனவாய் கணுக்கள் நிரம்பியவான கரும்புத் தடிகளைத் தின்று ஐவகி, Aivagi - நகரமாட்டாமல் அங்கேயே தாமஸித்துக்கடந்து (அதன்பிறகு) கழு நீரின் செழு நீர் தடத்து மூழ்கி, Kazhu Neerin Sezhu Neer Thadathu Moongki - செங்கழுநீர்ப் பூக்களோடு கூடிய அழகிய நீர் நிரம்பிய தடாகத்திலே முழுகி மண் ஏந்து, Man Aendu - (கொம்புகளில்) மண்ணைத் தாங்கிக்கொண்டிருக்கிற இள மேதிகள், Ila Methigal - இளைய எருமைகள் வைகும், Vaikum - (கரையேறாது நீரிலேயே) தாமஸித்திருக்கப்பெற்ற நாங்கூர், Nangoor - திருநாங்கூரிலே |