திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1226 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்த செயலையும்-திவ்ய ஆயுதங்கள் உடைய சேர்த்தி அழகையும் சொல்லி தேவர்கள் ஏத்த ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் – நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 9 | விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா ! விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஓன்று உடையாய் ! என நின்று இமையோர் பரவும் இடம் பைந்தடத்துப்
பெடையோடு செங்கால அன்னம் துகைப்பத் தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்
மடையோட நின்று மது விம்மு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-9 | பதவுரை Show / Hideவிடை ஓடவென்று, Vidai Oadavendru - ‘(ஏழு) ரிஷபங்கள் பங்கமடையும்படி அவற்றை ஜயித்து (- (மணிமாடக் கோயில் என் மனனே! வணங்கு)) ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா, Aaychi Men Thol Nayandha Vikirtha - நப்பின்னைப் பிராட்டியினுடைய மெல்லிய புஜங்களை விரும்பியணைத்த விலக்ஷண புருஷனே! விளங்கு சுடர் ஆழி என்னும் படையோடு சங்கு ஒன்று உடையாய், Vilangu Sudar Aazhi Ennum Padaiyodu Sangu Ondru Udaiyaai - விளங்குகின்ற தேஜஸ்ஸையுடைய சக்ராயுதத்தையும் ஒப்பற்ற சங்கையும் உடையவனே!’ என நின்று, En Nindru - என்ற சொல்லாநின்று கொண்டு இமையோர் பரவும் இடம், Imaiyor Paravum Idam - தேவர்கள் துதிசெய்யுமிடமாய், பைந்தடத்து செம் கால அன்னம் பெடையோடு துகைப்ப, Painthadathu Sem Kaala Annan Pedaiyodu Thugaippa - அழகிய தடாகத்திலே, சிவந்த கால்களையுடைய அன்னப் பறவை பேடையோடு கூடி ஏறித் துகைப்ப, (அதனாலே துகைப்புண்ட) தொகை புண்டரிகத்திடை மது, Thokai Pundarikatthidai Madhu - திரளான தாமரைப் பூக்களினின்று பெருகின தேனானது செங்கழுநீர் மடை ஓட நின்று விம்மும், Chengaluneer Madai Oda Nindru Vimmum - செங்கழுநீர் மடைகளிலும் ஓடிப் பாயும்படியாகப் பெருகப்பெற்ற நாங்கூர், Nangoor - திருநாங்கூரில் |