திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1227 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1227பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத் திருமொழிக்கு கற்றாருக்கு பலம் சொல்லுகிறது –அனுகூல பிரதி கூல சீலர் என்று வாசி அன்றிக்கே லோகமாக தங்கள் காலிலே வந்து விழும்படி மத்தகத்தின் மேல் ஏறி கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய் – ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வந்து பூமிக்கு தாங்களே நிர்வாஹகராய் ஆகாசத்திலே சென்று கிட்டும் படியாக முத்துக் குடையின் கீழே கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு விரும்பப் படுவர்-நிரதிசய ப்ரீதி உடையார் ஆவார்கள் – ஐஸ்வர்யத்தை புருஷார்த்தமாக சொல்லுவான் என் என்று ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க ஸ்ரீ ஈச்வரனே ஆகிலும் ஒரு கால் பிறந்து அபிஷேகம் பண்ண அமையும் ஸ்ரீ பாகவத சேஷம் ஆகலாம் ஆகில் என்று காணும் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இருப்பது -என்று அருளிச் செய்து அருளினார்) 10
வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு என்றும் தொண்டைய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார் கண்டார் வணங்கக் களியானை மாதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய் விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே –3-8-10
பதவுரை Show / Hide
என்றும் தொண்டு ஆய தொல் சீர்வயல் மங்கையர்கோன் கலியன, Endrum Thondu Aaya Thol Seervayal Mangaiyarkon Kaliyana - நித்ய கைங்காரியம் செய்வதையே ஸஹஜகுணமாகவுடையரும் வயல் சூழ்ந்த மங்கை நாட்டிலுள்ளார்க் குத் தலைவருமான ஆழ்வார்
ஒலி செய்தமிழ் மாலை, Oli Seithamil Maalai - அருளிச் செய்த தமிழ்த் தொடையான இத்திருமொழியை
வல்லார், Vallaar - ஓதவல்லர்கள்
கண்டார்வணங்க, Kandaarvananga - கண்டவரெல்லாம் காலிலே விழும்படி
காளியனை மீதே, Kaaliyana Meedhe - மத்தகஜத்தின் மேலேறி (இருந்து)
கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய், Kadal Soozh Ulakukku Oru Kaavalaraai - கடல் சூழ்ந்த மண்ணுலகம் முழுமைக்கும் தாங்களே துணையற்ற அரசராகி
விண் தோய் நெடு வெண்குடை நிழலின் கீழ், Vin Thoi Nedhu Venkudai Nizhalin Keel - வானத்தளவுமளாவிய நீண்ட வெண்கொற்றக் குடையின் கீழிருந்து
விரி நீர்உலகு ஆண்டு விரும்புவர், Viri Neerulagu Aandu Virumbuvar - ஆவாரண ஜலம் சூழ்ந்த பிரம்மாண்டத்தை ஆண்டு கொண்டு மகிழ்ந்திருக்கப்பெறுவர்.