திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1237 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1237பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித அர்த்தமாக ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இருக்கிற புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்-தமிழ் தொடை பத்தையும் வல்லார்கள் உபய விபூதியையும் தாங்கள் இட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்) 10
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ் மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே –3-9-10
பதவுரை Show / Hide
சங்கு மலி தண்டு சக்கரம் முதல் முன் வந்தும், Sangu Mali Thandu Chakkaram Mudhal Mun Vandhum - ஸ்ரீ பாஞ்சஜந்யமும் பொருந்திய கௌமோதகியும் ஸூதர்சநமும் முதலான திவ்யா யுதங்களை கண் முன்னே தரித்துக் கொண்டிருக்கிற
நெடிய தாமரை கண் பிரான் தான், Nedhiya Thamarai Kan Piraan Thaan - நீண்ட தாமரை போன்ற திருக்கண்களையுடைய ஸர்வேச்வரன்
அமரும் கோயில், Amarum Koyil - நித்யவாஸம் பண்ணுகிய ஸந் நிதியாய்
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்து நாங்கூர், Vangam Mali Kadal Ulagil Malivu Eythu Nangoor - கப்பல்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தில் பிரஸித்திபெற்ற திருநாங்கூரிலுள்ளதான்
வைகுந்த விண்ணகர்மேல், Vaikundha Vinnakarmel - வைகுந்த விண்ணகரத் திருபதி விஷயமாக
வண்டு அறையும் பொழில் சூழ் மங்கையர்த்தம் தலைவன், Vandu Araiym Pozhil Soozh Mangaiyartham Thalaivan - வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற சோலைகளினால் சூழப்பட்ட திருமங்களை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும்
மருவலர்தம் உடல் துணியவாள் வீசும்பரகாலன் கலிகன்றி சொன்ன, Maruvalartham Udal Thuniyavaal Veesumparakalan Kalikanri Sonna - பகைவருடைய சரீரங்கள் தொலையும்படி வாட்படையை வீசுகின்றவரும் பரகாலனென்னுந் திருநாமமுடையவருமான திருமங்கையாழ் வார் அருளிச் செய்த
சங்கம் மலி தமிழ் மாலை இவை பத்து வல்லார்கள், Sangam Mali Tamil Maalai Ivai Paththu Vallarhal - சங்கப்புலவர்கள் கொண்டாடத்தக்க தமிழ்மாலையாகிய இப்பத்துப் பரசுரங்களையும் ஓதவல்லவர்கள்
தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவார், Tharaniyodu Vizhumbu Aalum Thanmai Peruvar - பூமியையும் பரமபதத்தையும் ஆளும்படியான அதிசஙத்தைப் பெறுவார்கள்.