திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1240 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளயத்திலே நோவு பட புக வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து – இடையர்கள் கண்டு பிரீதராம்படி குவலயா பீடத்தின் உடைய கொம்பை முறித்து அநந்தரம் கம்சனுடைய மயிரைப் பிடித்து தலை கீழாகத் தள்ளி முதுகிலே அறைந்து அவனை அழியச் செய்த உபகாரகன் உடைய கோயில்) 3 | உம்பரும் இவ் ஏழு உலகும் ஏழு கடலும் எல்லாம்
உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வெய்த
கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன்
குஞ்சி பிடித்தடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்டப்
பலங்கனிகள் தேன் காட்ட படவரவேரல்குல்
அம்பனைய கண் மடவார் மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-3 | பதவுரை Show / Hideஉம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம், Umbarum Iv Aezh Ulagum Aezh Kadalum Ellam - தேவஜாதியும் இந்த ஸப்த லோகங்களும் ஸப்த ஸாகரங்களும் ஆகிய இவை யெல்லாவற்றையும் (- (மொக்கும் மலருமாய்ப் பூத்து நின்று)) உண்ட பிரான், Unda Piraan - (பிரளயகாலத்தில் ) திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகார சீலனும் முன் அண்டர்கள் கண்டு மகிழ்வு எய்த, Mun Andarkal Kandu Makizhvu Eytha - முன்பு இடையர்கள் கண்ணாலே கண்டு களிப்படையும்படி கும்பம் மிகு மதம் யானை மருப்பு ஒசித்து, Kumbam Migu Matham Yaanai Maruppu Osiththu - குடம் போன்ற பெரிய மத்தகத்தையுடைய மந்தகஜ மான குவலயாபீடத்தி னுடைய தந்தங்களை முறித்துவிட்டு (உள்ளே நுழைந்து) கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த, Kanjan Kunchipidiththu Adiththu - கம்ஸனுடைய மயிரைப் பிடித்து (கீழே தள்ளி) அவனை யழியச் செய்த புpரான், Puraan - உபகாரகனுமான பெருமானுடைய கோயில் மருங்கு எங்கும் பல புண்ணை, Kovil Marungu Engum Pala Punnai - திவ்ய தேசம் பக்கங்களிலெல்லாம் பலபல புன்னைமரங்கள் பைம்பொனொடு வெண்முத்தம் காட்ட, Paimponodu Venmuththam Kaata - அழகிய பொன்னையும் வெளுத்த முத்துக்களையும் பிகாரப்படுத்தவும் பலங்கனிகள் தேன் காட்ட, Palankanigal Then Kaata - பலாப்பழங்கள் தேனைச் சொரிந்து காட்டவும் பெற்றதாய் படம் அரவு ஏர் அல்குல் அம்பு அனைய கண் மடவார், Padam Aravu Aer Alkul Ambu Anaiya Kan Madavaar - படமெடுத்து பாம்பைப் போன்று அழகிய நிதம்பத்தையும் அம்பு போல் கூர்மையான கண்களையும் உடைய ஸ்த்ரீகள் மகிழ்வு எய்தும் நாங்குர் அரிமேய விண்ணகரம், Makizhvu Eythum Naangur Arimeya Vinnakaram - மகிழந்து வாழுமிடமான திருநாங்கூரிலே வணங்கு |