திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1243 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுக்காக இலங்கைக்கு நிர்வாஹனாய் இருக்கிறவனுடைய பத்துத் தலையும் இருபது தோளும் உதிரும்படியாக – தாளை உடைத்தாய் -நெடிதாய் -திண்ணியதாய் இருக்கிற வில்லை வளைத்த தசரதாத் மகன் -சேய் -பிள்ளை தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்னுமா போலே காணும் இருப்பது – அயர்வறும் அமரர்கள் அதிபதி வர்த்திக்கிற ஸ்தானம்) 6 | வாள் நெடுங்கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை
மன்னன் முடி யொருபதும் தோள் இருப்பதும் போய் உதிர
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன்
தனிச்சரண் வானவர்க்கரசு கருதுமிடம் தடமார்
சேண் இடங்கொள் மலர்க்கமலம் சேல் கயல்கள் வாளை
செந்நெலொடு மடுத்தரிய உதிர்ந்த செழு முத்தம்
வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரு மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-6 | பதவுரை Show / Hideவாள்நெடு கண் மலர் கூந்தல் மைதிலிக்கா, Vaalnedu Kan Malai Koondhal Maithilikka - வாள்போல் கூர்மையாய் நீண்ட திருக்கண்களையும் பூவணிந்த கூந்தலையுமுடைய ஸீதாபிராட்டியைச் சிறை வைத்த குற்றத்திற்காக (- (அரிமேய விண்ணகரம் வணங்கு)) இலங்கை மன்னன் ஒருபது முடியும் இருபது தோளும் போய் உதிர, Ilankai Mannan Orupathu Mudiyum Irupathu Tholum Poi Uthira - இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் சிதறிப் போம்படி தாள் நெடு திண் சிலை வளைத்த தயரதன் சேய், Thaal Neduthin Silai Valaitha Thayaradhan Sei - கதையோடு கூடி நீண்டு திண்ணிதான வில்லை வளைத்த தசரத புத்திரனும் என் தன் தனிசரன், En Than Thanisarang - எனக்கு ஒப்பற்ற ரசஷகனும் வானவாக்கு அரசு, Vaanavaakku Arasu - நித்யஸூரிநாதனுமான பெருமான் கருதும் இடம், Karudum Idam - திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கும் திவ்யதேசம்: தடம் ஆர், Thadam Aar - பொய்கைகளில் நிறைந் திருப்பனவும் சேண இடம் கொள், Sena Idam Kol - ஆகாசமுள்ள விடமெங்கும் ஓங்கி வளர்ந்திருப்பனவுமான கமலம் மலர், Kamalum Malar - தாமரைப் பூக்களையும் சேல் கயல்கள் வாளை, Sel Kayalgal Vaalai - சேல் கயல்வாளையென்னும் மீன்களையும் செந்நெலொபடு மடுத்து, Sennelopadu Maduthu - செந்நெற் பயிர்களோடு சேர்த்துப் பிடித்து அரிய, Ariya - அறுக்க உதிர்ந்த செழு முத்தம், Uthirntha Sezhu Mutham - அவற்றினின்று உதிர்ந்த அழகிய முத்துக்களை வாள் நெடு கண் கடைசியர்கள் வாரும், Vaal Nedukann Kadaiyiyarkal Vaarum - வாள்போன்று நீண்ட கண்களையுடைய கடைச் சாதிப் பெண்கள் வாரித் திரட்டுமிடமான அணிநாங்கூர், Aninangoor - திருநாங்கூரில் |