திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1248 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மாதவன் தான் உறையுமிடம்- ரசிகனானவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் ஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ சித்ர கூடத்திலே வர்த்தித்தால் போலே) 1 | போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே –4-1-1 | பதவுரை Show / Hideபோது அலர்ந்த பொழில் சோலை புறம் எங்கும், Pothu Alarntha Pozhil Solai Puram Engum - புஷ்பங்கள் மலரப்பெற்ற பெரிய சோலைகளுள்ளவிடங்கள் முழுதும். தாது உதிர, Thadu Uthira - பூக்களின் தாதுகள் உதிரும்படியாக பொரு திரைகள் வந்து அலைக்கும், Poru Thiraigal Vandu Alaikkum - செறிந்த அலைகள் வந்து வீசப்பெற்ற தடம் மண்ணி, Thadam Manni - பெரியமண்ணியாற்றினுடைய தென் கரைமேல், Then Karaimel - தெற்குக் கரையின் மேலே, மாதவன் தான் உறையும் இடம், Madhavan Thaan Uraiyum Idam - மாதவப்பெருமாள் நித்ய வாஸம் செய்தருளுமிடம் (எதுவென்றால்,) வயல் நாங்கை, Vayal Naangkai - கழனிகள் சூழ்ந்த திருநாங்கூரில் வரி வண்டு தேதென என்று இசைபாடும், Vari Vandu Thethen Endru Isai Paadum - ரேகைகளையுடைய வண்டுகள் தென்ன தென்னவென்று இசைபாடப்பெற்ற. திருத்தேவனார் தொகை, Thiruththevanar Thogai - திருத்தேவனார் தொகையென்னுந் திருப்பதியாம். |