திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1249 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவரான ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தராத்மாவாவாய்ப் புக்கு நின்று அவ்வவ கார்யங்களை நடத்திக் கொடுத்தும்-ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தை நடத்தியும் போருகையாலே மூவரும் நிற்கிறான் தானே என்று சொல்லாம்படியாய்-மூர்த்தி சப்தம் ஸ்வரூப வாசியாய் – அவர்களுக்கும் காரண பூதனாய் பிரதானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 2 | யாவரும் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம்
மாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார் மன்னு நாங்கைத்
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே –4-1-2 | பதவுரை Show / Hideயாவரும் ஆய், Yaavarum Aay - சேதனப் பொருள்கள் எல்லவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய் (- (அமர்ந்து உறையும் இடம்-;) (திருத்தேவனார் தொகையே -.)) யாவையும் ஆய், Yaavaiym Aay - அசேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய் எழில் வேதம் பொருள்களும் ஆய், Ezhil Vedham Porulgalum Aay - அழகிய வேதங்களின் அர்த்தமும் தானாய் மூவரும் ஆய், Moovaarum Aay - (பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்று) மூன்று வடிவுகள் கொண்டவனும் தானேயாய் முதல் ஆய, Muthal Aay - முழுமுதற் கடவுளான மூர்த்தி, Moorthy - எம்பெருமான் மா வரும், Maa Varum - குதிரை மேல் ஏறிவருகிற திண் படை, Thin Padai - திடமான ஆயுதங்களையுடைய மன்னை, Mannai - ராஜலோகத்தை வென்றி கொள்வார், Vendri Kolvaar - தோற்கடித்து வெற்றிபெறும் மந்தணர்கள் மன்னு, Mannu - நித்யவாஸம் பண்ணுகிற நாங்கை, Naangkai - திருநாங்கூரில் உள்ளதாய், தேவரும் சென்று இறைஞ்சு, Thevarum Sendru Irainju - நித்யஸூரிகளும் வந்து வணங்கப் பெற்றதாய் பொழில், Pozhil - சோலைகளை யுடைத்தான |