திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1249 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1249பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவரான ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தராத்மாவாவாய்ப் புக்கு நின்று அவ்வவ கார்யங்களை நடத்திக் கொடுத்தும்-ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தை நடத்தியும் போருகையாலே மூவரும் நிற்கிறான் தானே என்று சொல்லாம்படியாய்-மூர்த்தி சப்தம் ஸ்வரூப வாசியாய் – அவர்களுக்கும் காரண பூதனாய் பிரதானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 2
யாவரும் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய் மூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம் மாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார் மன்னு நாங்கைத் தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே –4-1-2
பதவுரை Show / Hide
யாவரும் ஆய், Yaavarum Aay - சேதனப் பொருள்கள் எல்லவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய் (- (அமர்ந்து உறையும் இடம்-;) (திருத்தேவனார் தொகையே -.))
யாவையும் ஆய், Yaavaiym Aay - அசேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய்
எழில் வேதம் பொருள்களும் ஆய், Ezhil Vedham Porulgalum Aay - அழகிய வேதங்களின் அர்த்தமும் தானாய்
மூவரும் ஆய், Moovaarum Aay - (பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்று) மூன்று வடிவுகள் கொண்டவனும் தானேயாய்
முதல் ஆய, Muthal Aay - முழுமுதற் கடவுளான
மூர்த்தி, Moorthy - எம்பெருமான்
மா வரும், Maa Varum - குதிரை மேல் ஏறிவருகிற
திண் படை, Thin Padai - திடமான ஆயுதங்களையுடைய
மன்னை, Mannai - ராஜலோகத்தை
வென்றி கொள்வார், Vendri Kolvaar - தோற்கடித்து வெற்றிபெறும் மந்தணர்கள்
மன்னு, Mannu - நித்யவாஸம் பண்ணுகிற
நாங்கை, Naangkai - திருநாங்கூரில் உள்ளதாய்,
தேவரும் சென்று இறைஞ்சு, Thevarum Sendru Irainju - நித்யஸூரிகளும் வந்து வணங்கப் பெற்றதாய்
பொழில், Pozhil - சோலைகளை யுடைத்தான