திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1251 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாம்தாம் அதிகாரத்துக்கு பாதகம் உள்ளவர் ஈச்வரோஹம் என்று இருப்பவர்கள் எங்களுக்கு ஸ்வாமியான நீ எங்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணி அருள வேணும் -என்ன அவர்கள் உடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைகாக வந்து நின்று அருளுகிற தேசம் இப்படி ஒரு கார்யப் பாட்டால் அன்றிக்கே சோலை வாய்ப்புக் கண்டு விடாதே வர்த்திக்கிற தேசம் ஆய்த்து) 4 | இந்த்ரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என்ன நின்று அருளும் இடம் எழில் நாங்கை
சுந்தர நற் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-4 | பதவுரை Show / Hideஇந்திரனும், Indiranum - தேவேந்திரனும் (- (திருத்தேவனார் தொகையே–.)) இமையவரும், Imaiyavarum - மற்றுமுள்ள தேவர்களும் முனிவர்களும், Munivargalum - (ஸநகர் முதலிய) மஹர்ஷிகளும் எழில் அமைந்த, Ezhil Amaindha - ப்ராஹ்மண லக்ஷ்மி பொருந்தியவனாய் சந்தம், Sandham - வேதங்களை நிரூபகமாகவுடையனாய் மலர், Malar - தாமரைப்பூவினின்று தோன்றினவனாய் சதுமுகனும், Sathumuganum - பிரமனும் கதிரவனும், Kathiravanum - ஸூரியனும் சந்திரனும், Chandiranum - சந்திரனும் எந்தை, Endhai - ‘எமக்குஸ்வாமியானவனே! எமக்கு, Emakku - எங்கள் விஷயத்திலே அருள், Arul - கிருபைபண்ணவேணும்’ என, En - என்று பிரார்த்திக்க நின்று, Ninru - அதற்கு இசைந்து நின்று அருளும் இடம், Arulum Idam - (அப்படியே) கிருபை பண்ணுமிடம் (எதுவென்றால்) எழில் நாங்கை, Ezhil Nangkai - திருநாங்கூரில் சுந்தரம் நல்பொழில், Sundaram Nalpozhil - மிகவுமழகிய சோலைகளாலே புடை சூழ், Pudai Soozh - நாற்புறமும் சூழப்பட்ட |