திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1253 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1253பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிப் பரப்பை அடைய அமுது செய்து ஸ்ரீ சர்வேஸ்வரனை அபரிச் சேத்யன்-என்று அறியக் கடவ வேதங்களுக்கும் எட்ட ஒண்ணாத படியான பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம் அதிமாநுஷ சேஷ்டிதத்தை உடையனாய் ஒரு பவனான ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வா திகன் வர்த்திக்கிற தேசம்) 6
ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம் சாலிவளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரை மேல் சேலுகளும் வயல் நாங்கைத் திருத் தேவனார் தொகையே— –4-1-6
பதவுரை Show / Hide
நால் மறையும் தொடராத, Naal Maraiyum Thodaraadha - (பெருமைபொருந்திய) நான்கு வேதங்களாலும் எட்டிப்பிடிக்க முடியாத (- (தடமண்ணித் தென்கரை மேல்;) (திருத்தேவனார் தொகையே))
பாலகன் ஆய, Paalagan Aaya - இளங்குழந்தையாய்க்கொண்டு
ஞாலம் எல்லாம், Njaalam Ellam - பூமிமுழுவதையும்
அமுது செய்து, Amuthu Seidhu - விழுங்கி
ஆல் இலையில், Aal Ilaiyil - ஆலந்தளிரில்
பள்ளி கொள்ளும், Palli Kollum - திருக்கண்வளர்ந்தருளுகிற
பரமன், Paraman - எம்பெருமானுடைய
இடம், Idam - திருப்பதி (எதுவென்றால்),
சாலி, Saali - செந்நெற் பயிர்களினுடைய
வளம், Valam - செழிப்பானது
பெருகிவரும், Perugivaram - அதிகப்பட்டு வராநிற்பதாய்
சேல் உகளும், Seyl Ugalum - மீன்கள் துள்ளி விளையாடப் பெற்றதான
வயல், Vayal - கழனிகளையுடைய
நாங்கை, Naangkai - திருநாங்கூரில்
சாலி, Saali - தற்சமவடசொல்