திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1253 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிப் பரப்பை அடைய அமுது செய்து ஸ்ரீ சர்வேஸ்வரனை அபரிச் சேத்யன்-என்று அறியக் கடவ வேதங்களுக்கும் எட்ட ஒண்ணாத படியான பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம் அதிமாநுஷ சேஷ்டிதத்தை உடையனாய் ஒரு பவனான ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வா திகன் வர்த்திக்கிற தேசம்) 6 | ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத
பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்
சாலிவளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரை மேல்
சேலுகளும் வயல் நாங்கைத் திருத் தேவனார் தொகையே— –4-1-6 | பதவுரை Show / Hideநால் மறையும் தொடராத, Naal Maraiyum Thodaraadha - (பெருமைபொருந்திய) நான்கு வேதங்களாலும் எட்டிப்பிடிக்க முடியாத (- (தடமண்ணித் தென்கரை மேல்;) (திருத்தேவனார் தொகையே)) பாலகன் ஆய, Paalagan Aaya - இளங்குழந்தையாய்க்கொண்டு ஞாலம் எல்லாம், Njaalam Ellam - பூமிமுழுவதையும் அமுது செய்து, Amuthu Seidhu - விழுங்கி ஆல் இலையில், Aal Ilaiyil - ஆலந்தளிரில் பள்ளி கொள்ளும், Palli Kollum - திருக்கண்வளர்ந்தருளுகிற பரமன், Paraman - எம்பெருமானுடைய இடம், Idam - திருப்பதி (எதுவென்றால்), சாலி, Saali - செந்நெற் பயிர்களினுடைய வளம், Valam - செழிப்பானது பெருகிவரும், Perugivaram - அதிகப்பட்டு வராநிற்பதாய் சேல் உகளும், Seyl Ugalum - மீன்கள் துள்ளி விளையாடப் பெற்றதான வயல், Vayal - கழனிகளையுடைய நாங்கை, Naangkai - திருநாங்கூரில் சாலி, Saali - தற்சமவடசொல் |