திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1254 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாட்டில் நடையாடாத ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தை பரிக்ரஹித்து ஹிரண்யன் இடைய முரட்டு உடலிலே வியாபாரியா நிற்கச் செய்தேயும்-வாடக் கடவதல்லாத கூரிய திரு உகிராலே-ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே உதிரம் அளைந்த கையேடு இருந்தானை -பெரியாழ்வார் திருமொழி -4-1-1–என்கிறபடியே சிறுக்கன் மேலே சீறினவன் பக்கலிலே தனக்கு சீற்றம் மாறாமையாலே பிளந்து பின்னை அளைந்து இருந்த வ்யாமோஹம்) 7 | ஓடாத வாள் அரியின் உருவாகி இரணியனை
வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலதிடம்
ஏடேறு பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சேடேறு மலர்ப் பொழில் தழுவு திருத் தேவனார் தொகையே –4-1-7 | பதவுரை Show / Hideஓடாத ஆள் அரியின் உரு ஆகி, Oadaadha Aal Ariyin Uru Aagi - நாட்டில் நடமாடாமல் அபூர்வமான நரஸிம்ஹ மூர்த்தியாகி (- (நாங்கை தன்னுள்;) (திருத்தேவனார் தொகையே)) வாடாத வள் உகிரால், Vaadaadha Val Ughiraal - வளையாத கூர்மைமிக்க நகங்களினால் இரணியனை பிளந்து அளைந்த மாலது, Iraaniyanai Pilandhu Alaintha Maalathu - ஹிரண்யாஸுரனைக் கிழித்து (ரத்தப்பெருக்கிலே) அளைந்து கொண்டிருந்த எம்பெருமானுடைய இடம், Idam - திருப்பதி (எதுவென்றால்) ஏடு ஏறு பெரு செல்வத்து, Aedu Aeru Peru Selvaththu - புத்தகங்களிலே எழுதி வைக்கத்தக்க மிகுந்த ஐச்வரியத்தை யுடையராய் எழில் மறையோர், Ezhil Maraiyor - அழகிய வைதிகர்களான அந்தணர் வாழ்கிற சேடு ஏறு பொழில் தழுவு, Sedu Eru Pozhil Thazhuvu - இளமை பொருந்தி சோலைகளோடு கூடிய |