திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1258 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1258பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் கேளாத படி வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற தலைகளை ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமான அம்பாலே அழியச் செய்து ராஷசர் உடைய ஐஸ்வர்யத்தை நம்முடையான் ஒருவன் கடவனாகப் பெற்றோம் இறே என்று அந்த ஐஸ்வர்யத்தை அவன் தம்பியான ஸ்ரீ விபீஷணனுக்கு கொடுத்து அருளினவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 1
கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும் அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே –4-2-1
பதவுரை Show / Hide
கம்பம் மா கடல் அடைத்து, Kambam Maa Kadal Adaiththu - (கண்டபோதே) நடுக்கத்தை விளைப்பதான பெரிய கடலிலே ஸேதுகட்டி
இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும், Ilankaiyukku Man Kathir Mudi Avai Padhum - இலங்கைக்கு அதிபதியான இராவணனுடைய ஒளிவிடுகின்ற தலைகள் பத்தையும்
அம்பினால் அறுத்து, Ambinaal Aruththu - பாணங்களினால் அறுத்து
அவன் தம்பிக்கு அரசு அளித்தவன், Avan Thambikku Arasu Aliththavan - அவ்விராவணன் தம்பியான விபீஷணாழ்வானுக்கு இராஜ்யமளித்த இராமபிரான்
உறை கோயில், Urai Koyil - எழுந்தருளியிருக்குமிடம் எதுவென்றால்,
செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ், Sem Palaa Nirai Senbagam Maadhavi Soothagam Vaalaihal Soozh - பலாமரங்களின் செல்விய வரிசைகளும் செண்பக மரங்களும் குருக்கத்திச் செடிகளும் மாமரங்களும் வாழை மரங்களும் (ஆகிய இவற்றால்) சூழப்பட்டு,
வம்பு உலாம் கமுகு ஓங்கிய, Vambu Ulaam Kamuku Oongiya - பரிமளம் வீசுகின்ற பாக்கு மரங்கள் ஓங்கி வளரப்பெற்ற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
வண்புரு டோத்தமம், Vanpuru Doththamam - வண்புருஷோத்தம மென்னும் திவ்யதேசமாம்.