திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1260 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1260பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவற்றின் உடைய ரஷணமும் தனக்கே பரம் ஆகையாலே அவற்றை மேய்த்து அவற்றின் உடைய ஆபத்தை போக்கி ரஷிக்கிறவன்-இன்னமும் இப்படி ரஷிக்கைக்கு பாங்கான தேசம் என்று அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 3
அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம் உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-3
பதவுரை Show / Hide
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு அது எல்லாம், Andar Aanavar Vaanavar Konukku Endru Amaiththa Sooru Adhu Ellam - இடையர்கள் தேவேந்திரனுக்குப் பலியிட வேண்டுமென்று சமைத்த சோற்றை முழுவதும் (- (உகந்து இனிது உறை கோயில்;) (வண்புருடோத்தமம்))
உண்டு, Undu - அமுது செய்தவனாயும்
கோ நிரை அவை மேய்த்து காத்தவன், Ko Nirai Avai Meyththu Kaaththavan - பசுக்கூட்டங்களை மேய்த்து ரக்ஷித்தவனாயுமுள்ள பெருமான்
குளிர் வார் பொழில், Kulir Vaar Pozhil - குளிர்ந்து பரந்த சோலைகளிலே,
கொண்டல் ஆர் முழவில், Kondal Aar Muzhavil - மேகங்களினுடைய மிக்க கோஷம்உண்டாகும் போது
குலம் மயில் நடம் ஆட, Kulam Mayil Nadam Aada - கூட்டங் கூட்டமான மயில்கள் கூத்தாடப் பெற்றதும்,
வண்டு இசைபாடிடு, Vandu Isaipaadidu - வண்டுகள் (மயில்களின் கூத்தாட்டத்திற்குத் தகுதியாக) இசைபாடப் பெற்றதுமான
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்