திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1261 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1261பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உள்ளே போய் புக்கு கம்சன் தலை மயிரைப் பிடித்து முகம் கீழ் பட வலித்து திருவடிகளாலே யுதைத்து முடித்தவன் இன்னும் இப்படிப் பட்ட விரோதி அம்சத்தை போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 4
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடி புக்கு ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில் கரும்பினூடு உயர் சாலிகள் விளை தரு கழனியில் மலி வாவி மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-4
பதவுரை Show / Hide
பரு கை யானையின் கொம்பினை பறித்து, Paru Kai Yaanainin Kombinai Pariththu - பருத்த துதிக்கையையுடைய (குவலயா பீடமென்னும்) யானையினது தந்தங்களை பிடுங்கிக் கொன்று, (- (வண்புருடோத்தமம்))
அதன் பாகனை சாடி புக்கு, Adhan Paaganai Saadi Pukku - அந்த யானையின் பாகனையும் உயிர் தொலைத்திட்டு உள்ளே நுழைந்து
மல்லரை ஒருங்க கொன்று, Mallarai Orunga Konru - மல்லர்களை ஒன்றுசேர முடித்திட்டு
பின் கஞ்சனை உதைத்தவன், Pin Kanjanai Uthaiththavan - அதற்குப் பிறகு கம்ஸனை முடித்தருளிய கண்ணபிரான்
உறை கோயில், Urai Koyil - நித்யவாஸம் பண்ணுமிடம்;
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி, Karumbinoodu Uyar Saaligal Vilaitharu Kazhaniyil Mali Vaavi - கருப்பஞ்சோலைகளின் இடையே ஓங்கி வளரானின்ற செந்நெற் பயிர்கள் விளையப்பெற்ற கழனிகளில் நிறைந்திருக்கிற நடைவாவிகளினுடைய
மருங்கு எலாம், Marungu Elam - பக்கங்களிலெல்லாம்
பொழில் ஓங்கிய, Pozhil Ongiya - சோலைகள் வளர்ந்திருக்கப் பெற்ற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்