திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1264 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் முடிந்து போகச் செய்தேயும் சிறுக்கன் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே ருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த ஸ்ரீ நர சிம்ஹம் எல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை கிழித்து தன்னைத் தந்த மகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம்) 7 | உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை
யளையும் வெஞ்சினத் தரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்தடிப்போர் கை
வளையில் நின்றொலி மல்கிய வண் புருடோத்தமமே –4-2-7 | பதவுரை Show / Hideஒண் திறல் பொன் பெயரோன் உளைய, On Thiral Pon Peyaron Ulaiya - பிரஸித்தமான வலிவையுடையனான இரணியனானவன் நோவுபடும்படி (- (வந்து உறை கோயில்;) (வண்புருடோத்தமம்)) தனது உரம்பிளந்து, Thanathu Urampilandu - அவனுடைய மார்பைக் கிழித்து உதிரத்தை அளையும், Uthirathai Alaiyum - (அவனது உடலில் நின்று இழிந்த) ரத்தத்தை அளைந்த வென் சினத்து அரி, Ven Sinaththu Ari - உக்ரஸிம்ஹனானவனும் பரி கீறிய, Pari Keeriyah - குதிரைவடிவு கொண்டுவந்த கேசியென்னும் அசுரனைக் கொன்றவனுமான அப்பன், Appan - ஸ்வாமி இளைய மங்கையர், Ilaiya Mangaiyar - சிறுபெண்கள் (நர்த்தனமனாடும்போது உண்டான) இணை அடி சிலம்பினோடு, Inai Adi Silampinodu - இரண்டுகால்களிலும் அணிந்த தண்டைச் சிலம்பின் ஒலியோடு கூட, ஏழில்கொள் பந்து அடிப்போர் கை வளையில் நின்று, Ezhalkol Pandhu Adipor Kai Valaiyil Nindru - அழகுபொருந்திய பந்தடிக்கும் சிறுமிகளினுடைய கைவளையல்களினின்று உண்டான ஓலிமல்பிய நாங்கூர், Olimalpiya Nangoor - ஓசையானது நிறைந்த திருநாங்கூரில் |