திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1265 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக – பிஷையை முன்பு அருளின-தேவன் உடைய வலிய சாபம் நீங்க மகா உதாரனானவன்– வர்த்திக்கிற தேசம்) 8 | வாளையார் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்றது நீங்க
மூளையார் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வன் பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ் தரு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-8 | பதவுரை Show / Hideவாளை ஆர்தட கண்உமை பங்கன், Vaalai Aarthada Kanumai Pangan - மீன்போன்ற விசாலமான கண்களை யுடையளான பார்வதியைத் தன் சரீரத்தின் ஒருபக்கத்தில் உடையனான ருத்ரனுடைய (- (வண்புருடோத்தமம்)) வல் சாபம் அது நீங்க முன், Val Saapam Adhu Neenga Mun - வலிய சாபம் தொலையும்படியாக, முன்பொரு காலத்தில் மூளை ஆர் சிரத்து ஐயம் அளித்த, Moolai Aar Sirathu Aiyam Alitha - வெறும் எலும்பான தலையோட்டிலே பிக்ஷையளித்த எம் முகில் வண்ணன், Em Mukil Vannan - நீலமேக நிறத்தனான எம்பெருமான் பாளை, Paalai - பாளைகளை யுடைத்தாய் வான், Vaan - ஓங்கியிருந்துள்ள கமுகு ஊடு, Kamuku Oodu - பாக்கு மரங்களினிடையே உயர், Uyar - உயர்ந்திருக்கின்ற தெங்கின், Thengin - தென்னை மரங்களினுடைய வன் பழம், Van Pazham - பெரிய காய்கள் விழ, Vizha - (குளத்தில்) விழ வாளை வெருவி போய் பாய், Vaalai Veruvi Poi Pai - (அங்குள்ள) மீன்கள் அஞ்சி அவ்விடத்தை விட்டுப் போய் வேறிடத்தில் குதித்துச் சேரப்பெற்ற தடம் சூழ்தரு நாங்கூர், Thadam Soozhdharu Naangoor - தடாகங்களினால் சூழப்பட்ட திருநாங்கூரில் |