திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1266 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டமான ஜகத் என்று அதன் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக அவன் விரும்பி வர்த்திக்கிற தேசம்) 9 | இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத் தன் எழிலாரும்
உந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்
குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-9 | பதவுரை Show / Hideஇந்து வார் சடை ஈசனை பயந்த, Indhu Vaar Sadai Eesanai Bayandha - சந்திரனோடுகூடி நீண்டிருக்கிற சடைமுடியையுடைய ருத்ரனை ஸ்ருஷ்டித்த (- (உகந்து இனிது உறை கோயில்;) (வண்புருடோத்தமம்)) நான் முகனை, Naan Mughanai - பிரமனை தன் எழில் ஆரும் உந்திமா மலர்மீமிசை படைத்தவன், Than Ezhil Aarum Undhimaa Malarmimisai Padaiththavan - தன்னுடைய அழகு திருநாபிக் கமலத்திலே பொருந்திய உண்டாக்கின பெருமான் மந்தி, Mandhi - பெண் குரங்கானது குந்தி, Kundhi - குந்திக்கொண்டு வாழையின் கொழு கனி நுகர்ந்து தன் குருளையை தழுவி போய், Vaazhaiyin Kozhu Kani Nukarndhu Than Kurulaiyai Thazhuvi Poi - நல்ல வாழைப் பழங்களை புஜித்து தன்து குட்டியை அணைத்துக் கொண்டு அங்கு நின்றும்போய் மாம்பணைமேல் வைகும் நாங்கூர், Maambanai Mel Vaikum Naangoor - மாமரக் கிளைகளின் மேல் தங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரில் |