திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1267 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில் மேகம் போலே உதாரரான ஸ்ரீ ஆழ்வார் பண்ணிலே ஆரும்படியாக பாடிய இப்பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்-அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான ஸ்ரீ நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக பெறுவர்) 10 | மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலிமன் அருள் மாரி
பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப்பத்தும் வல்லார் உலகில்
எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே –4-2-10 | பதவுரை Show / Hideமண்ணுள் ஆர் புகழ் வேதியர் நாங்கூர், Mannul Aar Pugazh Vedhiyar Naangoor - பூமண்டலத்தில் நிறைந்த புகழையுடைய வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரிலுள்ள வண்புருடோத்தமத்துள், Vanpurudoththama Thul - வண்புருடோத்தம மென்னுத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற அண்ணல், Annal - ஸ்வாமியினுடைய சே அடிக்கீழ் அடைந்து உய்ந்தவன், Sae Adikizh Adayndhu Uyndhavan - திருவடிகளின் கீழே சேர்ந்து உஜ்ஜீவித்தவரும் ஆலி மன் –, Aali Man - திருவாலி நாட்டுக்குத் தலைவரும் அருள் மாரி, Arul Maari - கிருபையை வர்ஷிக்கும்மேகமா-யுள்ளவருமான திருமங்கையாழ்வார் பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இப்பத்தும் வல்லார், Pannul Aarthar Paadiya Paadal Ippaththum Vallar - கானத்திலே பொருந்தும்படி பாடின பாசுரமான இத்திருமொழியை ஓதவல்லவர்கள் உலகில் எண் இலாத பேர் இன்பம் உற்று, Ulagil En Iladha Per Inbam Utrum - இவ்வுலகின்கண் அளவற்ற மஹாநந்தங்களை அநுபவித்து (பிறகு) இமையவரோடும் கூடுவர், Imayavaro Thum Kooduvar - நித்யஸூரிகளோடும் கூட்டி வாழப் பெறுவர். |