திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1270 | பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காணவே தாபத் த்ரயம் ஆறும்படி ஸ்ரமஹரமான வடிவை உடையவனை கண்டு அனுபவித்து நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்கிறார்) 3 | திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3 | பதவுரை Show / Hideதிடம், Thidam - திடமான (- (நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய்) (கோயிலின் உள்ளே அடியேன் நான் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேன்)) விசும்பு எரி நீர், Visumbu Eri Neer - ஆகாசம் அக்நி ஜலம் முதலான பஞ்சபூதங்களும் திங்களும், Thingalum - சந்திரனும் சுடரும், Sudarum - ஸூர்யனும் செழு நிலத்து பிராணிகளும், Sezhu Nilathu Piranigalum - வளம்மிக்க பூமியிலுள்ள பிராணிகளும் மற்றும் படர் பொருள்களும், Mattrum Padar Porulgalum - மற்றும் பலவகைப்பட்ட பதார்த்தங்களும் (ஆகிய இவற்றுக்கு) ஆய் நின்றவன் தன்னை, Aayi Nindravan Thannai - அந்தர்யாமியா யிருப்பவனும் கடல் நிறம் வண்ணன் தன்னை, Kadal Niram Vannan Thannai - கடலின் நிறம் போன்ற திருமேனியை யுடையனுமான பெருமானை பங்கயத்து அயன் அவன் அனைய, Pangayathu Ayan Avan Anaiya - தாமரையிற் பிறந்த பிரமனைப் போன்றவர்களாய் திடம் மொழி மறையோர், Thidam Mozhi Maraiyor - திடமான வாக்கையுடையவர்களான அந்தணர்கள் வாழ்கிற |