திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1271 | பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப் பாட்டில் அந்தராத்மாவை அனுபவித்தவர் இதில் விபவத்தையும் அதுக்கடியான வ்யூஹத்தையும் அனுசந்தித்து உகக்கிறார்) 4 | வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை
அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலைகடல் துயின்ற வம்மானைத்
திசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-4 | பதவுரை Show / Hideவசை அறு குறள் ஆய், Vasai Aru Kural Aayi - குற்றமற்ற வாமநரூபியாய்க்கொண்டு (- (நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்)) மாவலி வேள்வியில், Mavali Velviyil - மஹாபலியினுடைய யாக பூமியில் மண் அளவிட்டவன் தன்னை, Man Azhavittavan Thannai - உலகளந்தவனும், அசைவு அறும் அமரர், Asaivu Arum Amarar - சலிப்பில்லாத நித்யஸூரிகள் அடி இணை, Adi Inai - உபயபாதங்களை வணங்க, Vananga - ஆச்ரயிக்கும்படியாக அலை கடல் துயின்ற அம்மானை, Alai Kadal Thuyinra Ammanaik - அலையெறிகின்ற திருப்பாற் கடலில் பள்ளிகொண்டிருப்பவனும், உயர் மணி மகுடம் சூடி நின்றானை, Uyar Mani Makudam Soodi Nindranaik - உயர்ந்த ரத்ன கிரீடத்தை அணிந்துகொண்டிருப்பவனுமான பெருமானை திசைமுகன் அனையோர், Thisaimugan Anaiyor - பிரமனைப்போன்ற அந்தணர்கள் வாழ்கிற |