திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1272 | பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விபவத்தில் நெஞ்சு சென்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களைப் பேசி அனுபவிக்கிறார்) 5 | தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்குத்
தாய் மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே
தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-5 | பதவுரை Show / Hideதீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று, Thee Manaththu Arakkar Thiral Azhithavane Endru - ‘தீய நெஞ்சையுடையரான ராக்ஷஸர்களின் உடைய மிடுக்கை நாசம் செய்தவனே!’ என்று சொல்லிக்கொண்டு (- (நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே அடியேன் நான் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்)) சென்று அடைந்தவர் தமக்கு, Sendru Adaindhavar Thamakku - வந்து கிட்டினவர்கள் விஷயத்தில் தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும், Thaai Manaththu Irangi Arulinai Kodukkum - தாய்போலே கரைந்து கிருபை பண்ணுகின்ற தயரதன் மதலையை, Thayaradhan Mathalaiyai - தசரத புத்ரனானவனும் காமனை பயந்தான் தன்னை, Kaamanai Bayandhaan Thannai - ப்ரத்யும்நனைப் படைத்தவனுமான பெருமானை சயம் மே, Sayam Mae - ஜயசப்தங்கள் பொருந்தியிருக்கப் பெற்றதும் தேன் மலர் பொழில் சூழ், Then Malar Pozhil Soozh - தேன்நிறைந்த புஷ்பங்களையுடைய சோலைகளாலே சூழப்பட்டதுமான நாங்கை, Naangkai - திருநாங்கூரில் |