திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1273 | பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி கைக்கு எட்டிற்று ஓர் அம்பை விட்டவனை நிரவதிக சம்பத்தை உடைய பிராமணர் உடைய அவர்கள் ஐஸ்வர்யத்துக்கு நிதான பூதையான ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் கூடக் காணப் பெற்று சாம்சாரிக சகல துரிதங்களும் தீரப் பெற்றேன்) 6 | மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானைச்
செல்வ நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே –4-3-6 | பதவுரை Show / Hideமல்லை மாமுந்நீர் அதர்பட, Mallai Maamunneer Atharpad - செல்வம் மிக்க பெரிய கடலானது வழியாக அமையும்படி (- (நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே;)) மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை, Malaiyaal Anai Seidhu Magizhndhavan Thannai - மலைகளைக்கொண்டு அணைகட்டி திருவுள்ள முகந்தவனும், கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க, Kallin Meedhu Iyandra Kadi Mathil Ilangai Kalang - (த்ரிகூடமென்னும்) மலையின் மேலே கட்டப்பட்ட அரணான மதிளை யுடைத்தான இலங்காபுரியானது சிதறிபொழியும்படி ஓர் வாளி தொட்டனை, Oor Vaalai Thottanai - ஒரு அம்பை பிரயோகித்தவனுமான பெருமாணை செல்வம் நால்மறையோர், Selvam Naalmaraiyore - சதுர்வேதங்களைச் செல்வமாகவுடைய அந்தணர் வாழ்கிற அல்லி மாமலராள் தன்னொடும், Alli Maamalaraal Thannodum - பிராட்டியோடு கூட அடியேன் கண்டுகொண்டு, Adiyen Kandukondu - அடியேன் ஸேவித்து அல்லல் தீர்ந்தேன், Allal Theerndhen - துன்பங்கள் தொலையப் பெற்றேன் |