திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1277 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1277பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரப்பை உடைத்தான வெண் கொற்றக் குடைக் கீழே பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து அநந்தரம்-நிரவதிக ப்ரீதி உக்தராய் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர் பேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார் தேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி நலமுடையவன் அருளினன் அயர்வறும் அமரர்கள் அதிபதி – கோயில் திருமலை பெருமாள் கோயில் உய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு இந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்) 10
தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள் மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே –4-3-10
பதவுரை Show / Hide
தேன் அமர் சோலை, Then Amar Solai - வண்டுகள் படிந்த சோலைகளையுடைய
நாங்கை, Naangkai - திருநாங்கூரில்
நல் நடுவுன், Nal Naduvun - நட்ட நடுவில்
செம்பொன்செய் கோயிலின் உள்ளே, Sembonsei Koyilin Ullae - செம்பொன்செய் கோயிலென்னுந் திருப்பதியிலே
வானவர் கோனை, Vaanavar Konai - தேவாதிதேவனை
கண்டமை, Kandamai - தாம் ஸேவித்தபடியை
சொல்லும், Sollum - அருளிச்செய்தவரும்
மங்கையார், Mangaiyaar - திருமங்கையில் உள்ளார்க்குத் தலைவரும்
வாள், Vaal - வாட்படையை யுடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வாருடைய,
ஊனம் இல் பாடல், Oonam Il Paadal - குறையொன்றுமில்லாத பாசுரமான
ஓன்பதோடு ஒன்றும், Onpathodu Onrum - இப்பத்துப்பாட்டுகளையும்
ஒழிவு இன்றி, Ozhivu Inri - ஒன்றும் விடாமல்;
கற்று வல்லார்கள், Kattru Vallarhal - ஓதி யுணரவல்லவர்கள்
மானம், Maanam - பரப்பையுடைய
வெண் குடை கீழ், Ven Kudai Keezh - வெண்கொற்றக் குடையின் கீழ் (இருந்துகொண்டு)
வையகம், Vaiyagam - பூ மண்டலத்தை
ஆண்டு, Aandu - அரசாண்டு
மகிழ்ந்து, Magizhndu - உவந்து
வானவர் ஆகுவர், Vaanavar Aaguvar - (பிறகு) நித்யஸூரிகளுமாவர்