திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1279 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருத்தரும் விரும்பாத நஞ்சை யுண்டு அறிவு குடி புகுராமையாலே உகந்த பிள்ளை கண்டீர் மடமகள் வடிவு கொண்ட -என்னாமல் மடமகள் தன் வடிவு கொண்ட -அசாதாரணமான வேஷம்) 2 | பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கிப்
பெற்றெடுத்த தாய் போல் மடுப்ப யாரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை கண்டீர்
நெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறிய வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2 | பதவுரை Show / Hideநெல் தொடுத்த நீலம்மலர்நிறைந்த சூழல், Nel Thodutha Neelammalarniraindha Soozhal - நெற்கதிர்களின்மேல் வரிசை வரிசையாகக் கட்டப்பட்ட கரு நெய்கற் பூக்களாலே நிறைந்துள்ள சுற்றுப்புறங்களில் (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து, என் செங்கண் மால்!)) இரு சிறைய வண்டஒலியும், Iru Sirai Vandaoliyum - அழகிய சிறகுகளையுடைய வண்டுகளின் ஆரவாரமும் நெடு கண்ணார்தம் சிறு அடிமேல் சிலம்பு ஒலியும், Nedu Kannaartham Siru Adimeel Silambu Oliyum - நீண்ட கண்களையுடையரான மாதர்களது சிறிய பாதங்களிலணிந்த தண்டைகளினுடைய ஓசையும் மிழற்று, Mizhatru - தொனிக்கப்பெற்ற பொன்தொடி தோள், Pondhodi Thol - பொன் வளைகளணிந்த புஜங்களை உடையவளும் மடம் மகள் தன், Madam Magal Than - ஆத்மகுணம் உடையவளுமான யசோதைப் பிராட்டியினுடைய வடிவு கொண்ட, Vadivu Konda - வேஷத்தை ஏறிட்டுக்கொண்டுவந்த பொல்லாத வன் பேய்ச்சி, Polladha Van Paeychchi - மிகவும் பொல்லாத பூதனையானவள் கொங்கை வாங்கி, Kongai Vaangi - (தனது) முலையைக் கையாலெடுத்து பெற்று எடுத்த தாய் போல மடுப்ப, Petru Edutha Thaai Pola Maduppa - பெற்றுவளர்த்த தாய்போலே |