திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1281 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1281பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கறுப்பு ஆர்ந்த திண்ணியதான ருஷபங்களை அடர்த்து விவாஹ மங்களத்தை நிர்வஹித்த கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர்) 4
வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர் ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச் சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-4
பதவுரை Show / Hide
ஏர் ஆரும் மலர் பொழில்கள், Aer Aarum Malai Pozhilgal - அழகுபொருந்திய புஷ்பங்களையுடைய சோலைகளானவை (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மால்))
எங்கும் தழுவி, Engum Thazhuvi - ஆகாசமுள்ளவளவும் வியாபித்து
எழில் மதியை, Ezhil Mathiyai - அழகிய சந்திரனை
கால் தொடர, Kaal Thodara - (அசையவொட்டாமல்) பால் கட்டப்பெற்றதும்
விளங்கு சோதி சீர் ஆரும் மணி மாடம் திகழும், Vilangu Sothi Seer Aarum Mani Maadam Thigazhum - விளங்குகின்ற ஒளியையுடைய அழகிய மணிமாடங்கள் பிரகாசிக்கப்பெற்றதுமான
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி, Vaar Aarum Mulai Madavaal Pinnaikku Aagi - கச்சணிந்த முலையையுடையவளும் ஆத்மகுணங்களை உடையவளுமான நப்பின்னைப்பிராட்டியைப் பெறுதற்காக,
வளை மருப்பின், Valai Maruppin - வளைந்த கொம்புகளையுடையனவாய்
கடு சினத்து, Kadu Sinatthu - மிக்க கோபத்தை யுடையனவாய்
வன் தாள் ஆர்ந்த, Van Thaal Aarnth - வலிய கால்களையுடையனவாய்
கார் ஆர், Kaar Aar - கருநிறம் பொருந்தியவான
திண் விடை, Thin Vidai - வலிய ரிஷபங்களை
அடர்ந்து, Adarnthu - வலியடக்கி
வதுவை ஆண்ட, Vadhuvai Aanda - (அவளை) விவாஹஞ் செய்துகொண்ட
கருமுகில் கோல் திருநிறத்துஎன் கண்ணர்கண்டீர், Karumugil Kol Thiruniraththen Kannarkandheer - நீலமேகச்யாமளனான நம் கண்ணபிரான் காண்மின்.