திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1282 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ நப்பின்னை இருவர் உடன் சம்ஸ்லேஷித்த படியை அனுசந்திக்கிறார்- வெளுத்த தந்த பங்க்தியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார்- அவன் திருமேனியைப் பார்த்த படியே இருக்கையாலே திருமேனியிலே கறுப்பு கண்ணிலே ஊறின ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி) 5 | கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-5 | பதவுரை Show / Hideமுலை இலங்குநிரை சந்தி மாடம் வீதி, Mulai Ilangunirai Sandhi Maadam Veethi - மலைபோல் விளங்குகின்ற வரிசைவரிசையாக ஒன்றோடொன்று சேர்ந்திருக்கிற மாடங்களையுடைய தெருக்களிலே (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்துஎன் செங்கண் மால்;)) மடம் மொழியார், Madham Mozhiyaar - இனிய பேச்சையுடைய பெண்களின் முகத்து, Mugaththu - முகத்திலுள்ள இரண்டு சிலை, Irandu Silai - இரண்டு விற்கள் போன்ற புருவங்களானவை விலங்கி, Vilangi - வளைந்து ஆடவரை மனம் சிறைகொண்டு இருக்கும், Aadavarai Manam Siraiykondu Irukkum - ஆண்பிள்ளைகளின் மனத்தை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டிருக்கப்பெற்ற கலை இலங்கும், Kalai Ilangum - மேகலை விளங்கப்பெற்ற அகல் அல்குல், Akal Alkul - அகன்ற நிதம்பத்தையுடையளாய் கதிர்முத்தவெள் நகையாள், Kathirmuthavell Nagaiyaal - ஒளிபொருந்திய முத்துப் போலே வெளுத்த பற்களையுடையளான கமலம் பாவை, Kamalam Paavai - பெரியபிராட்டியினுடையவும் கரு கண் ஆய்ச்சி, Karhu Kan Aaychchi - கறுத்த கண்களையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடையவும் முலை இலங்கும் ஒளி மணி பூண்வடமும் தேய்ப்ப, Mulai Ilangum Oli Mani Poonvadam Theyppa - தனங்களிலே விளங்குகின்ற அழகிய மணிகளிழைத்துச் செய்யப்பட்ட கண்டிகையும் ஹாரமும் உராய, (அதனால்) மூவாத, Moovadha - நித்யயௌவனம் மாறாத வுரை நெடுதோள், Vurai Neduthol - மலைபோன்று நெடிய திருத் தோள்களையுடைய மூர்த்தி கண்டீர், Moorthi Kandeer - ஸ்வாமி காண்மின். |