திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1283 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1283பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் மற்றும் உள்ள முதலிகளுமாக இப்பாட்டில் சொல்லுகிறது என் -என்று ஸ்ரீ பட்டருக்கு விண்ணப்பம் செய்ய0ஒரு கால் இயலைக் கேளா ராவணன் வார்த்தை காண்-என்று அருளிச் செய்தார்) 6
தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர் மான் போலும் மென்னோக்கில் செய்ய வாயார் மரகதம் போலே மடக்கிளியைக் கை மேல் கொண்டு தேன் போலும் மென் மழலை பயிற்று நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-6
பதவுரை Show / Hide
மான் போலும் மென் நோக்கின், Maan Polum Men Nookkin - மானின் நோக்குப்போன்ற அழகிய நோக்கையுடையராய் (- (நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என்) (செங்கண் மால்–;-))
செய்ய வாயார், Seyya Vaayaar - சிவந்த அதரத்தையுமுடையரான பெண்கள்
மரகதம் போல், Maragatham Pol - மரகதப்பச்சை போலே பசுமையாய்
மடம், Madham - அழகியதான
கிளியை, Kiliyai - கிளிப்பிள்ளையை
கை மேல் கொண்டு, Kai Mel Kondu - தங்கள் கைகளின் மேல்வைத்துக்கொண்டு
தேன் போலும் மெல் மழலை, Then Polum Mel Mazhalai - தேன் போலினியமிருதுவான பேச்சை
புயிற்றும், Puyitrum - கற்பிக்கப்பெற்ற
தரணி ஆளன் தான் போலும் என்றுஎழுந்தான், Tharani Aalan Thaan Polum Endru Ezhunthaan - ‘(இராமனென்கிற ஒரு சிறு மனிசன்) பூமியையெல்லாம் தானே ஆள்பலனாக நினைத்து அஹங்காரப்படுகின்றான்;
அது கண்டு, Adhu Kandu - அதை அறிந்தும்
தரித்து இருப்பான், Thariththu Iruppaan - (அந்த ராமனைத் தண்டியாமல்) பொறுத்திருப்பவன்
அரக்கர் தங்கள் கோன்போலும், Arakkar Thangal Konpolum - ராக்ஷஸர்க்குத் தலைவனாவனோ’
என்று, Endru - என்றிப்படி நினைத்து
எழுந்தான், Ezhunthaan - கிளர்ந்தவனான இராவணனுடைய
குன்றம் அன்ன, Kundram Anna - மலைபோன்ற
இருபது தோள், Irupathu Thol - இருபது தோள்களையும்
உடன், Udan - ஏககாலத்தில்
துணித்த, Thuniththa - அறுத்தொழித்த
ஒருவன் கண்டீர், Oruvan Kandeer - தனிவீரன் காண்மின்.