திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1285 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1285பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர் இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும் சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-8
பதவுரை Show / Hide
இலங்கிய, Ilangiya - (பிரமாணங்களுள் சிறந்ததாக) விளங்குகின்ற (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மால்;))
நால் மறை அனைத்தும், Naal Marai Anaiththum - எல்லா வேதங்களும்
அங்கம் ஆறும், Angam Aarum - (வியாகரணம் முதலிய) ஆறு அங்கங்களும்
ஏழ் இசையும், Ezhu Isaiyum - ஸப்தஸ்வரங்களும்
கேள்விகளும், Kelvigalum - இதிஹாஸ புராணங்களும் (ஆகிய இவை)
எண் திக்கு எங்கும், En Thikku Engum - எட்டுத் திசைகளிலுமெல்லாம்
சிலம்பிய, Silambiya - கோஷம் செய்யப்பெற்றதும்
நல் பெரு செல்வம், Nal Peru Selvam - நல்ல அளவற்ற செல்வம்
திகழும், Thigazhum - விளங்கப்பெற்றதுமான
சிலம்பின் இடை, Silambin Idai - தண்டைச்சிலம்பின் நடுவிலிட்ட
சிறு பரல் போல், Siru Paral Pol - சிறிய பருக்காங்கல்போல
பெரிய மேரு, Periya Meru - பெருத்த மேருமலையானது
திரு குளம்பில், Thiru Kulambil - அழகிய குளம்பிலே
கணகணப்ப, Kanakanappa - கணகணவென்று ஒலிக்கும்படியாகவும்
திரு ஆகாரம் குலுங்க, Thiru Aakaram Kulunga - (திருமார்பில்) பிராட்டியிருக்குமிருப்பு குலுங்கும்படியாகவும்
நிலம் மடந்தைதனை, Nilam Madandhaithanai - பூமிப்பிராட்டியை
இடந்து, Idandhu - கோட்டால் குத்தியெடுத்து
புல்கி, Pulki - தழுவிக்கொண்டு
கோட்டிடை, Kottidai - கோரப் பல்லின்மீது
வைத்து அருளிய –, Vaithu Aruliyah - ஸ்தாபித்துக்கொண்ட
எம் கோமான் கண்டீர், Em Koman Kandir - எம்பெருமான் காண்மின்