திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1286 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆழியானது மிக்கு இருந்துள்ள ஊழி வெள்ளத்தைப் பண்டு திருமேனியிலே ஏக தேசத்தில் அடக்கின ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்) 9 | ஏழு உலகும் தாள்வரையும் எங்குமூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகு மூழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்
ஊழி தொறும் ஊழி தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர்
சேழுயர்ந்த மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலே –4-4-9 | பதவுரை Show / Hideஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்தசெல்வத்து, Ozhithorum Ozhithorum Uyarndha Selvathu - காலம் செல்லச்செல்ல வளர்ந்துவருகிற செல்வத்தையுடையராய் (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மால்–;)) ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கு நாவர், Ongiya Nanmarai Anaithum Thangu Navar - சிறந்த வேதங்களையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிற நாவையுடையரான வைதிகர்கள் வாழப்பெற்றதும் சேழ்உயர்ந்தமணிமாடம் திகழும், Seyzhuyarnthamanimaadam Thigazhum - மிகவும் உயர்ந்த மணிமாடங்கள் விளங்கப்பெற்றதுமான ஏழ் உலகும் நாள்வரையும் எங்கும், Ezhu Ulakum Naalvaraiyum Engum - ஸப்தத்வீபங்களும் பக்கத்ததுச் சிறுமலைகளையுடைய பெரிய மலைகளும் ஆகிய எவ்விடங்களையும் மூடி, Moodi - ஆக்கிரமித்து எண் திசையும் மண் தலமும் அண்டம் மண்டி, En Thisayum Mann Thalamum Andam Mandi - எட்டுத் திக்குக்களிலும் எல்லாப் பூமியிலும் அண்டத்திலும் பரவி மோழை யெழுந்து, Mozhai Yezhunthu - மோழை கிளம்பி ஆழி மிகும், Aazhi Mikum - கடல் பெருகும்படியான ஊழி வெள்ளம், Oozhi Vellam - பிரளயப்பெரு வெள்ளத்தை முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர், Mun Akattil Odukkia Em Moorthi Kandeer - முன்பொருகால் திருவயிற்றில் அடக்கிக்கொண்டஎமது ஸ்வாமியானவான். |