திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1287 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1287பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஐந்தும் ஐந்தும் வல்லார்-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும் அது கலசாத ஐந்தும் ஐஹிகத்தில் ஐஸ்வர்யமும் குறைவற புஜித்து ஸ்ரீ பரம பதத்தில் ஸ்ரீ நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக விளங்குவர்) 10
சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக் கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே –4-4-10
பதவுரை Show / Hide
சீர் அணிந்த, Seer Anindha - சிறப்புப் பொருந்திய
மணி மாடம், Mani Maadam - மணிமாடங்கள்
திகழும், Thigazhum - விளங்கப்பெற்ற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரிலுள்ள
திருத்தெற்றியம்பலத்து, Thiruththetriyampalathu - திருத்தெற்றியம்பல மென்னந் திருப்பதியி லெழுந்தருளியிருக்கிற
என், En - எனக்கு ஸ்வாமியான
செம் கண் மாலை, Sem Kan Maalai - செந்தாமரைக்கண் பெருமான் விஷயமாக,
கூர் அணிந்த வேல் வலவன், Koora Anindha Vel Valavan - கூர்மை பொருந்திய வேற்படையை ஆளுமவரும்
ஆலி நாடன், Aali Naadan - திருவாலி நாட்டுக்குத் தலைவரும்
கோடி மாடம் மங்கையர் கோன், Kodi Maadam Mangaiyar Kon - கொடிகளணிந்த மாடங்களையுடைய திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
குறையல் ஆளி, Kuraiyal Aali - திருக்குறையலூரை ஆள்பவரும்
பார் அணிந்த தொல் புகழான், Paar Anindha Thol Pugazhaan - பூமிக்கு அலங்காரமான தொல்புகழை உடையவருமான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
பாமாலை இவை ஐந்தும் ஐந்தும், Paamalai Ivai Aindhum Aindhum - இப் பத்துப்பாசுரங்களையும்
வல்லார் தாம், Vallaar Thaam - ஓத வல்லவர்கள்
உலகத்து, Ulakatthu - இவ்வுலகத்தில்
சீர் அணிந்த மன்னர் ஆகி, Seer Anintha Mannar Aagi - அரசர்களாகி வாழ்ந்து (பிறகு)
சேண் விசும்பில், Seen Visumbil - பரமாகாச மென்கிற பரமபதத்திலே
வானவர் ஆய், Vaanavar Aayi - நித்ய ஸூரிகளோடு ஒத்தவர்களாய்
நிகழ்வர், Nigalvar - விளங்கப்பெறுவர்கள்