திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1291 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் விரோதி நிரசனத்தால் அல்லது போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து இவையும் ரச அனுபவத்தால் அல்லது போது போக்க மாட்டாதே இருக்கும் படியும்) 4 | தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப்
பூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத்
தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-4 | பதவுரை Show / Hideதாங்க அரு சினத்து, Thanga Aru Sinatthu - (ஒருவராலும்) தாங்கமுடியாத கோபத்தையுடையதும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்)) வன் தாள், Van Thaal - வலியுள்ள கால்களையுடையதும் தட கை, Thad Kai - பெரிய துதிக்கையையுடையதுமான மா, Maa - (குவலயாபீடமென்னும்) யானையினுடைய மருப்பு வாங்கி, Maruppu Vaangi - தந்தத்தைப் பிடுங்கிப் போட்டவனாயும் பூ குருந்து ஒசித்து, Poo Kurunthu Osiththu - பூத்த குருந்த மரத்தை முறித் தொழித்தவனாயும் புள் வாய் பிளந்து, Pul Vaai Pilandhu - பகாஸுரனுடைய வாயைக் கிழித்தவனாயும் எருது அடர்த்த, Eruthu Adarththa - ரிஷபங்களை வலியடக்கினவனாயுமுள்ள எந்தை, Endhai - எம்பெருமான மா கனி நுகர்ந்த மந்தி, Maa Kani Nukarntha Mandhi - மாம்பழங்களைப் புஜித்த குரங்கானது வந்து, Vandhu - (அந்த மாமரத்தினின்றும் வாழை மரத்திலே) வந்து சேர்ந்து வண்டு இரிய, Vandu Iriya - (அங்கிருந்த) வண்டுகள் சிதறியோடும்படியாக தீம் வாழை கனி நுகரும், Theem Vaalai Kani Nukarum - இனிய வாழைப் பழங்களைப் புஜிக்கப்பெற்ற |