திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1291 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1291பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் விரோதி நிரசனத்தால் அல்லது போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து இவையும் ரச அனுபவத்தால் அல்லது போது போக்க மாட்டாதே இருக்கும் படியும்) 4
தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப் பூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத் தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-4
பதவுரை Show / Hide
தாங்க அரு சினத்து, Thanga Aru Sinatthu - (ஒருவராலும்) தாங்கமுடியாத கோபத்தையுடையதும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
வன் தாள், Van Thaal - வலியுள்ள கால்களையுடையதும்
தட கை, Thad Kai - பெரிய துதிக்கையையுடையதுமான
மா, Maa - (குவலயாபீடமென்னும்) யானையினுடைய
மருப்பு வாங்கி, Maruppu Vaangi - தந்தத்தைப் பிடுங்கிப் போட்டவனாயும்
பூ குருந்து ஒசித்து, Poo Kurunthu Osiththu - பூத்த குருந்த மரத்தை முறித் தொழித்தவனாயும்
புள் வாய் பிளந்து, Pul Vaai Pilandhu - பகாஸுரனுடைய வாயைக் கிழித்தவனாயும்
எருது அடர்த்த, Eruthu Adarththa - ரிஷபங்களை வலியடக்கினவனாயுமுள்ள
எந்தை, Endhai - எம்பெருமான
மா கனி நுகர்ந்த மந்தி, Maa Kani Nukarntha Mandhi - மாம்பழங்களைப் புஜித்த குரங்கானது
வந்து, Vandhu - (அந்த மாமரத்தினின்றும் வாழை மரத்திலே) வந்து சேர்ந்து
வண்டு இரிய, Vandu Iriya - (அங்கிருந்த) வண்டுகள் சிதறியோடும்படியாக
தீம் வாழை கனி நுகரும், Theem Vaalai Kani Nukarum - இனிய வாழைப் பழங்களைப் புஜிக்கப்பெற்ற