திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1294 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1294பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான ஸ்ரீ சர்வேஸ்வரன் இங்கே வந்து வர்த்தியா நின்றான்-என்கிறார்) 7
குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும் தென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-7
பதவுரை Show / Hide
குன்றமும், Kundramum - மலைகளும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்;) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
வானும், Vaanum - ஆகாசமும்
மண்ணும், Mannum - பூமியும்
குளிர் புனல், Kulir Punal - குளிர்ச்சியே இயற்கையான நீரும்
திங்களோடு, Thingalodu - சந்திரனும்
நின்ற, Nindra - நிலைநின்ற
வெம் சுடரும், Vem Sudarum - ஸூர்யனும்
அல்லா நிலைகளும், Allaa Nilaihalum - மற்றுமுள்ள நக்ஷத்ராதி ஸ்திதியும்
ஆய, Aaya - தானேயாயிருக்கப்பெற்ற
எந்தை, Endhai - எம்பெருமான்
மன்றமும், Manramum - பெரிய வீதிகளும்
வயலும், Vayalum - கழனிகளும்
காவும், Kaavum - தோட்டங்களும்
மாடமும், Maadum - மாட மாளிகைகளும் ஆகிய
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும்
தென்றல், Thendral - தென்றல் காற்றானது
மணம் கொண்டு, Manam Kondo - பரிமளத்தை வீசிக்கொண்டு
வந்து உலவும், Vandhu Ulavum - ஸஞ்சரிக்கப்பெற்ற