திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1301 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராஜத் துரோகத்தைப் பார்த்தால் சம்பந்தம் உள்ள இடம் எங்கும் அழியச் செய்ய வேண்டி இருக்க அவன் தம்பிக்கே கொடுத்தான் ஆய்த்து) 4 | முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே யரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்பு தேனுகரு நாங்கைக்
கனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4 | பதவுரை Show / Hideமுனை முகத்து அரக்கண் மாள, Munai Mugaththu Arakkan Maala - யுத்தகளத்திலே இராவணன் முடியும்படியாக (- (காவளந்தண்பாடியாய்!;) (நீயே களைகண்)) பத்து முடிகள் அறுத்து வீழ்த்து, Paththu Mudigal Aruththu Veelththu - (அவனது) பத்துத் தலைகளையும் அறுத்துத் தள்ளி ஆங்கு, Aangu - அந்த லங்கையிலே அனையவற்கு இளையவற்கே, Anaiyavarkku Ilaiyavarkke - அப்படிப்பட்ட ராவணனுடைய தம்பியான விபீஷணனுக்கு அரசு அளித்தருளினானே, Arasu Alitharulinane - ராஜ்யத்தைத் தந்தருளினவனே!, சுனைகளில் கயல்கள் பாய, Sunaiyil Kayalgal Paaya - நீர்நிலைகளில் கயல்மீன்கள் அஞ்சித் துள்ளயோடும்படியாக சுரும்பு தேன் நுகரும், Surumbu Then Nukarum - வண்டுகளானவை (ஆரவாரத்துடனே) தேனைப் பருகுமிடமான நாங்கை, Naangkai - திருநாங்கூரில் கனை கழல், Kanai Kazhal - ஒலிக்கின்ற வீரத்தண்டையை யுடையனாய்க் கொண்டு |