திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1306 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கார்யாவஸ்தமாயும் காரணாவஸ்தமாயும் போருகிறது ஸ்ரீ ப்ரஹ்மம் ஒன்றுமே என்று வேதங்களால் பிரதிபாதிக்கப் படுபவனுமாய் ஸ்ரீ திரு நாங்கூரிலே-சர்வ கந்த -என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்று தோற்றும்படி இருக்கும் ஆய்த்து இப்படி நிரதிசய போக்யனான நீயே ரஷகனாக வேணும்) 9 | சந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூதமாகி
அந்தமா யாதியாகி யருமறை யவையும் ஆனாய்
மந்தமார் பொழில்கள் தோறும் மட மயிலாலு நாங்கைக்
கந்தமார் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-9 | பதவுரை Show / Hideசந்தம் ஆய், Sandham Aayi - சந்தஸ்ஸுக்கு நியாமகனாய் (- (காவளந்தன்பாடியாய்!;) (நீயே களை கண்)) சமயம் ஆகி, Samayam Aagi - அவற்றின் வ்யவஸ்தைகளுக்கும் நியாமகனாய் சமயம் ஐ பூதம் ஆகி, Samayam Ai Poodham Aagi - வ்யவஸ்தையோடு கூடின பஞ்ச பூதங்களுக்கும் நியாமகனாய் அந்தம் ஆய், Andham Aayi - உலக முடிவுக்கு காரணபூதனாய் ஆதி ஆகி, Aadhi Aagi - உலக ஸ்ருஷ்டிக்கும் காரண பூதனாய் அரு மறை அவையும் ஆனாய், Aru Marai Avaiyum Aanaai - அருமையான வேதங்களுக்கும் நிர்வாஹகனாயிருக்கும் பெருமானே! மந்தம் ஆர் பொழில்கள் தோறும் மடம் மயில் ஆலும் நாங்கை, Mandham Aar Pozhilgal Thorum Madham Mayil Aalum Naangkai - பாரிஜாத மரங்கள் பொருந்திய சோலைகளெங்கும் அழகிய மயில்களானவை கூத்தாடாநிற்குமிடமான திருநாங்கூரில் கந்தம் ஆர், Kandham Aar - பரிமளம் நிறைந்த |