திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1311 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செல்ல நின்றதுவும்-வர நின்றதுவும்-ஆகர்ஷமாய் இருக்கைக்கும் கிட்டினார் குற்றம் காணாக் கண் இட்டு இருக்கும்படி யாலேயும் -ஆனாய் -என்கிறார்) 4 | கானார் கரி கொம்பு ஒசித்த களிறே
நா நா வகை நல்லவர் மன்னிய நாங்கூர்
தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள் புரியாயே –4-7-4 | பதவுரை Show / Hideகான் ஆர் கரி கொம்பு அது ஒசித்த களிறே, Kaan Aar Kari Kombu Adhu Osiththa Kalire - காட்டிலே வளர்ந்து கொழுப்படைந்திருந்த (குவலயாபீடமென்னும்) யானையினுடைய தந்தங்களை முறித்தொழித்த யானைபோல் செருக்குற்ற பெருமானே! நானாவகை நல்லவர், Naanavagai Nallavar - (குலம் கல்வி முதலிய) பலவகைகளினால் நன்மை பெற்றவர்கள் மன்னிய, Manniya - பொருந்திவாழ்கிற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் தேன் ஆர் பொழில் சூழ், Then Aar Pozhil Soozh - தேன் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவெள்ளக் குளத்துள், Thiruvellak Kulathul - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற ஆனாய், Aanaai - ஆனை போன்றவனே அடியேனுக்கு அருள்புரியாய், Adiyenukku Arulpuriyai - அடியேன் மீது கிருபை பண்ணவேணும் |