திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1311 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1311பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செல்ல நின்றதுவும்-வர நின்றதுவும்-ஆகர்ஷமாய் இருக்கைக்கும் கிட்டினார் குற்றம் காணாக் கண் இட்டு இருக்கும்படி யாலேயும் -ஆனாய் -என்கிறார்) 4
கானார் கரி கொம்பு ஒசித்த களிறே நா நா வகை நல்லவர் மன்னிய நாங்கூர் தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆனாய் அடியேனுக்கு அருள் புரியாயே –4-7-4
பதவுரை Show / Hide
கான் ஆர் கரி கொம்பு அது ஒசித்த களிறே, Kaan Aar Kari Kombu Adhu Osiththa Kalire - காட்டிலே வளர்ந்து கொழுப்படைந்திருந்த (குவலயாபீடமென்னும்) யானையினுடைய தந்தங்களை முறித்தொழித்த யானைபோல் செருக்குற்ற பெருமானே!
நானாவகை நல்லவர், Naanavagai Nallavar - (குலம் கல்வி முதலிய) பலவகைகளினால் நன்மை பெற்றவர்கள்
மன்னிய, Manniya - பொருந்திவாழ்கிற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
தேன் ஆர் பொழில் சூழ், Then Aar Pozhil Soozh - தேன் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட
திருவெள்ளக் குளத்துள், Thiruvellak Kulathul - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற
ஆனாய், Aanaai - ஆனை போன்றவனே
அடியேனுக்கு அருள்புரியாய், Adiyenukku Arulpuriyai - அடியேன் மீது கிருபை பண்ணவேணும்