திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1318 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1318பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 1
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க் குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும் தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும் பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1
பதவுரை Show / Hide
வெருவாதாள், Veruvaathal - அஞ்சாதவளாய்க் கொண்டு (- (என் பெண் பிள்ளையானவள்) (வேங்கடமே வேங்கடமே என்கின்றாள்–;))
வாய் வெருவி, Vaai Veruvi - வாய்பிதற்றுகின்றவளாய்
என்குடங்கால் மருவாள், Enkudankaal Maruvaal - எனதுமடியில் பொருந்து கின்றிலள்;
வாள் நெடு கண் துயில் மறந்தாள், Vaal Nedu Kan Thuyil Marandhaal - வாள்போன்று நீண்ட கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்;
வண்டு, Vandu - வண்டுபோலவும்
ஆர் கொண்டல், Aar Konda - பூர்ண மேகம்போலவும்
உரு ஆளன், Uru Aalan - திருவுருவமுடையவனும்
வானவர் தம் உயிர் ஆளன், Vaanavar Tham Uyir Aalan - நித்யஸூரிகளுக்கு உயிராயிருப்பவனும்
ஒலி திரை நீர், Oli Thirai Neer - கோஷிக்கின்ற அலைநீர்
பௌவம் கொண்ட திரு ஆளன், Pauvam Konda Thiru Alan - பொருந்திய கடலில் நின்றும் கொள்ளப்பட்ட பிராட்டியை ஆள்பவனமான எம்பெருமான்
என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - எனது பெண்பிள்ளை திறத்துச்செய்தவகைகளை
நான் எங்ஙனம் சிந்திக்கேன், Naan Engganam Sindhikkeen - நான் நினைக்கத்தான் முடியுமோ?