திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1330 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உகவாதார் சொல்லும் பழியை பரிஹரிகைக்கும்-உகப்பார் நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறுகைக்கு அன்றோ திரு இந்தளூரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறது) 3 | பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கன்னி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே –4-9-3 | பதவுரை Show / Hideவையம் ஈர் அடியால் அளந்து, Vaiyam Eer Adiyal Alandhu - உலகங்களை இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவராயும் வண்டு மூசி முரலும் கண்ணி முடியீர், Vandu Moosi Murallum Kanni Mudiyir - வண்டுகளானவை மொய்த்துக்கொண்டு ரீங்காரம் செய்யப்பெற்ற மாலையை திருமுடியில் அணிந்து கொண்டவராயுமிருக்கிற இந்தளூரீர், Indhaloorir - திருவிந்தளூர் நாதரே!, இங்கு, Ingu - இவ்வுலகில் |