திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1331 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு அவத்யம் வரும் என்று இறே நீர் தாம் இப்படிப் படுகிறது-நாம் அத்தைப் பொறுக்கிறோம் என்ன உமக்கு பொறுக்க ஒண்ணாததும் ஓன்று உண்டு-எங்களுக்கும் அவத்யம் என்கிறார் நதே நுரூபே-என்னக் கடவது இறே) 4 | ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத் தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக் காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான் வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே –4-9-4 | பதவுரை Show / Hideஇங்கு ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு, Ingu Aasai Vazhuvathu Aeththum Emakku - இந்நிலத்தில் ஆசைகுன்றாமல் துதிக்கின்ற எமக்கு இழுக்கு ஆய்த்து, Izhukku Aayththu - (இத்துதிசெய்தல்) அவத்யமாய் வந்து முடிந்தது; தேசம் அறிய, Desam Ariya - உலகமெல்லாம் அறியும்படியாக உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு அடியோர்க்கு, Umakke Aalai Thirikinromukku Adiyorukku - உமக்கே தொண்டராய்த் திரிகின்ற எமக்கு |