திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1332 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம் அனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது – பூ அலறும் போதை செவ்விபார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது – பரத்வம் நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும் வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும் ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரம் ஸ்ரீ தசரத ஸ்ரீ வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும் உகந்து அருளின நிலங்கள் -தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே குருடருக்கு வைத்த இறையிலியில் விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே) 5 | தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய் எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால் தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே –4-9-5 | பதவுரை Show / Hideஇந்தளூரீர், Indhaloorir - திருவிந்தளூர்ப் பெருமாளே! நீர், Neer - தேவரீர் தீ எம் பெருமான், Thee Em Perumaan - தேஜஸ்தத்வத்திற்கு அந்தர்யாமியான எம்பெருமானாகவும் நீர் எம் பெருமான், Neer Em Perumaan - ஜலதத்வத்திற்கு அந்தர்யாமியான பெருமானாயும் திசை எம்பெருமான் ஆயும் இருநிலன் எம்பெருமான் ஆகியும் நின்றால், Thisai Emperumaan Aayum Irunilan Emperumaan Aagiyum Nindraal - திசைகளுக்கு அந்தர்யாமியான பெருமானாயும் விசாலமான பூமிக்கு அந்தர்யாமியான பெருமானாயும் நின்றால் |