திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1336 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சில் பிரகாசத்தை ஒழியவே நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை அங்கு உள்ளாரோபாதி முழுக்க காட்சி கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து நிற்கிறது) 9 | எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே –4-9-9 | பதவுரை Show / Hideஎந்தை தந்தை தம்மான் என்று என்று, Endhai Thandhai Thammaan Endru Endru - என் தகப்பனார் அவர் தகப்பனார் அவர் தகப்பனார் என்கிற முறைமையில் (- (இந்தளூரீர்!;)) எமர் ஏழ் அளவும், Emar Ezh Azhavum - எமது முன்னோர்கள் எழுதலை முறையாக வந்து நின்ற, Vandhu Nindra - தேவரீருடைய கைங்கரியத்திற்கு இசைந்து வந்திருக்கின்ற தொண்டரோர்க்கே, Thondarorkke - அடியோங்கள் விஷயத்திலேயே வாசி வல்லீர், Vaasi Vallir - கணக்குப் பார்க்கின்றீர்; ஆல், Aal - ஐயோ!; சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர், Sindhai Thannul Mundi Nitrir - எமது நெஞ்சுக்குள்ளே முற்பட்டுவந்து நிற்கின்றீர்; திருமேனி இந்த வண்ணம் என்று சிறிதும் காட்டீர், Thirumeni Indha Vannam Endru Siridum Kaatteer - திருமேனியின் நிறம் இன்னதென்று சிறிதேனும் காட்டுகின்றிலீர் |