திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1337 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1337பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றை அப்யசித்து-அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள் இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்- அந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே ஸ்வத உத்கர்ஷத்தை உடையரான நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர்) 10
ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக் காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே –4-9-10
பதவுரை Show / Hide
ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில், Aer Ar Pozhil Soozh Indhalooril - அழகிய சோலைகளாலே சூழப்பட்ட
எந்தை பெருமனை, Endhai Perumanai - எம்பெருமான் விஷயமாக
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன், Kaar Ar Puravin Mangai Vendan - மேகங்கள்படித்த தோப்புகளையுடைய திருமங்கை நகர்க்குத் தலைவரான
கலியன், Kaliyan - ஆழ்வார்
ஒலி செய்த, Oli Seitha - அருளிச்செய்த
சீர் ஆர் இன் சொல் மாலை, Seer Ar In Sol Maalai - சிறந்த மதுரமான இச்சொல் மாலையை
கற்று, Kattru - ஓதி
திரிவார், Thirivaar - திரிகின்றவர்கள்
உலகத்து ஆர் ஆர், Ulagaththu Ar Ar - இவ்வுலகத்தில் எவரெவருண்டோ,
அவரே, Avarae - அவர்களே
என்றும், Endrum - எக்காலத்திலும்
அமரர்க்கு, Amararukku - நித்யஸூரிகளுக்கும்
அமரர் ஆவார், Amarar Aavaar - கௌரவிக்கத்தக்கவராவர்