திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1339 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1339பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கார் காலத்திலே நிறைந்த மேகம் போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன் ரஷணத்துக்கு பாங்கான இடம் -என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற கோயில்) 2
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக் கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித் தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-2
பதவுரை Show / Hide
அன்று, Andru - முற்காலத்தில்
ஆ நிரை மேய்த்து, Aa Nirai Maeyththu - (கோபாலகிருஷ்ணனாய்ப் பிறந்து) பசக்கூட்டங்களை மேய்த்தவனாயும்
அலை கடல் அடைத்திட்டு, Alai Kadal Adaiththittu - அலையெறிகின்ற கடலிலே அணைகட்டி (இலங்கையிற் சென்று)
அரக்கர்தம் சிரங்களை உருட்டி, Arakkartham Sirangalai Urutti - ராக்ஷஸர்களுடைய தலைகளை அறுத்துத் தள்ளினவனாயும்
கார்நிறை மேகம் கலந்தது, Kaarnirai Megam Kalandhadhu - கார்காலத்தில் திரண்டெழுந்த மேகத்தோடொத்த
ஓர் உருவம், Oru Uruvam - விலக்ஷணமான வடிவையுடையனாயுமிருக்கிற
கண்ணனார், Kannanaar - கண்ணபிரான்
கருதிய கோயில், Karuthiya Koyil - திருவுள்ளமுவந்த திவ்ய தேசம் (எதுவென்றால்)
நிரை பூ, Nirai Poo - வரிசை வரிசையாகப் பூத்திருக்கிற
செருந்தி, Serundhi - ஸுரபுன்னை மரங்களினுடையவும்
முத்து அரும்பி, Muthu Arumbi - முத்துப்போன்ற மொக்குகள் அரும்பியிருக்கிற
புன்னை, Punnai - புன்னை மரங்களினுடையவும்
பொதும்பிடை, Podumpidai - பொந்துகளிலே