திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1340 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரத சாஸ்தரத்துக்கு வேண்டும் லஷணங்கள் எல்லாம் எழுதிக் கொள்ளலாம் படி பல வகைப் பட்ட ந்ருத்தங்களைப் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம்) 3 | கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்தவன் தன்
படமிறப் பாய்ந்து பன் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்
படவரவல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்ட நின்று அதிரும் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-3 | பதவுரை Show / Hideமுன் கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி, Mun Kadu Vidam Udaiya Kaaliyan Thadathai Kalakki - (அந்த நாகத்தை) முன்பொருகால், மிகக் கொடிதான விஷத்தையுடைத்தான காளியநாகம் கிடந்த பொய்கையைக் கலங்கச்செய்து (- (திருவெள்ளியங்குடி அதுவே)) அலக்கழித்து, Alakkazhithu - வருந்தும்படிபண்ணி அவன் தன் படம் இற பாய்ந்து, Avan Than Padam Irapaayndhu - அக்காளியனுடைய படங்களானவை முறியும்படியாக (கடம்ப மரத்தினின்று பாய்ந்து) பல் மணி சிந்த, Pal Mani Sindha - (படத்திலுள்ள) மணிகளெல்லாம் சிந்தும்படியாக பல் நடம் பயின்றவன் கோயில், Pal Nadam Bayindravan Koyil - (அப்படங்களின் மீது நின்று) பலவகை நர்த்தனங்களைப் பண்ணின பெருமான் ஸந்நிதி (எதுவென்னில்) படம் அரவு அல்குல் பாவை நல்லார்கள், Padam Aravu Alkul Paavai Nallargal - படமெடுத்த பாம்போடொத்த நிதம்பத்தையுடையரான அழகிய மாதர்கள் பயிற்றிய நாடகத்து, Payitriya Naadakathu - பழகிய நாடகத்தினுடைய ஒலி, Oli - ஓசையானது அடை புடை போய் தழுவி, Adai Pudai Poi Thazhuvi - அடுத்த பக்கங்களிலெங்கும் சென்று பரவி அண்டம் நின்று அதிரும், Andam Nindru Adhirum - ஆகாசத்திலுஞ் சென்று அதிரப்பெற்ற |