திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1343 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ – என்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்) 6 | காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச்
செற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-6 | பதவுரை Show / Hideபூளை காற்று இடை கரந்தன, Pooalai Kaatru Idai Karandhana - பூளைப்பூவானது பெருங்காற்றிலே உருமாய்ந்து ஒழிவதுபோல (- (திருவெள்ளியங்குடி அதுவே–.)) அரக்கர் கடல் சேனை அரந்தை உற, Arakkar Kadal Senai Arandhai Ura - ராக்ஷஸருடைய கடல் போன்ற சேனையானது துன்பமடையும்படியாகவும் கூற்று இடை செல்ல, Koottu Idai Sella - யமனிடம் சென்று சேரும்படியாகவும் கொடு கணை துரந்த, Kodu Kanai Thurandha - கொடிய அம்புகளைப் பிரயோகித்த கோலம் வில் இராமன் தன் கோயில், Kolam Vil Iraman Than Koyil - அழகிய வில்லையுடைய இராமபிரானுடைய ஸந்நிதி (எதுவென்றால்); ஊற்று இடை நின்ற வாழையின், Ootru Idai Nindra Vaalaiyin - நீரூற்று உள்ள நிலங்களிலே முளைத்திருக்கிற வாழை மரங்களினுடைய ஊழ்ந்து வீழ்ந்தன கனிகள், Oozhndhu Veelndhana Kanigal - (கனியப்பழுத்து) இற்று உதிர்ந்த பழங்களை கயல்கள், Kayalgal - கயல் மீன்கள் மண்டி உண்டு, Mandi Undu - மேல்விழுந்து புஜித்து சேற்றிடை உகள், Settridai Ugal - சேற்று நிலங்களிலே துள்ளி விளையாடப்பெற்ற திகழ் வயல் சூழ், Thigazh Vayal Soozh - விளங்குகின்ற கழனிகளால் சூழப்பட்ட |