திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1344 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1344பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சுத்த ஸ்வாபாவம் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் -என்னுதல் அன்றிக்கே-சுக்ரன் அத்தேசத்தை உபாசித்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு அத்தை சொல்லிற்று ஆகவுமாம் வெள்ளியார் -என்றது அவனை ஆதரித்து சொன்ன படி அன்றிக்கே –வெள்ளியார் வணங்க –வெள்ளி மலையை உடைய -ருத்ரன் வந்து ஆஸ்ரயிக்க ஸ்வப்ன லப்த்தம் தனம் யதா -என்கிறபடியே சடக்கென அவன் பாதகத்தைப் போக்கினவன்) 7
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத் தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில் அள்ளியம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-7
பதவுரை Show / Hide
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த, Olliya Karumam Seivan Endru Unarntha - (வேண்டுவோர்க்கு வேண்டினபடி கொடுப்பதாகிற சிறந்த காரியத்தைச் செய்யக் கடவேனென்று ஸங்கல்பித்துக்கொண்ட (- (திரு வெள்ளியங்குடி அதுவே))
மாவலி, Mavali - மஹாபலியினுடைய
வேள்வியில், Velviyil - யாகத்திலே
தௌ;ளிய குறள் ஆய்புக்கு, Thau Liyak Kural Aaypukku - தெளிவுள்ள வாமந மூர்த்தியாய்க்கொண்டு பிரவேசித்து
மூ அடி கொண்டு, Moo Adi Kondo - (அந்த மாவலியிடமிருந்து) மூவடி நிலத்தை இரந்து பெற்று
திக்கு உற வளர்ந்தவன் கோயில், Thikku Ura Valarnthavan Koyil - எல்லாத் திசைகளிலும் வியாபிக்கும்படியாக வளர்ந்த பெருமான் வாழுமிடம் (எதுவென்றால்);
அள்ளி அம் பொழில் வாய், Alli Am Pozhil Vaai - தாதுகளையுடையனவாய் அழகியவான சோலைகளிலே
இருந்து வாழ், Irundhu Vazh - இருந்துகொண்டு மகிழ்கிற
குயில்கள் அவை, Kuyilgal Avai - குயில்களானவை
அரி அரி என்று அழைப்ப, Ari Ari Endru Azaippa - ‘ஹாரிர் ஹாரி:’ என்று கூவப்பெற்றதாய்,
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான், Velliyar Vananga Virainthu Arul Seivaan - சுக்கிரன் வந்து உபாஸனை பண்ண அவனுக்கு விரைவில் அருள்செய்த பெருமானுடையதான